பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 385

கடையுகக் கடல் ஒலி காட்ட - யுக முடிவில் எழும் கடலின் ஆரவாரம்
செய்து; காந்துவாள் - மனம் எரிகின்றவளும்; குடதிசைக் செக்கரின்
சேந்த கூந்தலாள் -
மேற்குத் திசையிற் காணப்படும் அந்திச் செவ்வானம்
போல் சிவந்த கூந்தலை உடையவளுமாய்; வடதிசை வாயிலின் வந்து
தோன்றினாள் -
வடக்குப் பக்கத்து அரண்மனை வாசலில் வந்து
சேர்ந்தாள்.

     இலங்கைக்கு வடக்கிலுள்ள தண்டக வனத்தில் சின்னா பின்னப்பட்டுச்
சூர்ப்பணகை வருதலால் வடதிசை வாயிலில் புகுந்து வருதல் கூறினார்.25

3092.தோன்றலும், தொல் நகர்
     அரக்கர் தோகையர்
ஏன்று எதிர், வயிறு அலைத்து,
     இரங்கி ஏங்கினார்;
மூன்று உலகு உடையவன்
     தங்கை மூக்கு இலள்,
தான் தனியவள் வர,
     தரிக்க வல்லரோ?

    தோன்றலும் - (இவ்வாறு சூர்ப்பணகை) வந்து காட்சி தந்ததும்;
தொல் நகர் அரக்கர் தோகையர் - பழமையான இலங்கை நகரின் அசுர
குலப் பெண்கள்; ஏன்று - எதிர்கொண்டு; எதிர் - அவளெதிரில்; வயிறு
அலைத்து -
வயிற்றில் அடித்துக் கொண்டு; இரங்கி ஏங்கினார் - வருந்தி
அழுதனர்; மூன்று உலகு உடையவன் தங்கை - மூவுலகங்களுக்கும்
தலைவனான இராவணன் தங்கை; மூக்கு இலள் - மூக்கு இழந்தவளாய்;
தான் தனியவள் வர - தான் துணையின்றி வர; தரிக்க வல்லரோ? -
பொறுக்க இயல்பவராய் ஆவரோ?

     இது முதல் பத்தொன்பது பாடல்கள் அவள் நிலை கண்டு இலங்கை
மக்கள் உற்ற துயரைக் கூறுவனவாம். இது வரை காணாத ஒன்று
இலங்கையர் கோன் தங்கைக்கு நேர்தல் கண்டு அரக்கர் அதிர்ந்தனர்.26

3093.பொருக்கென நோக்கினர்,
     புகல்வது ஓர்கிலர்,
அரக்கரும் இரைத்தனர்;
     அசனி ஆம் எனக்
கரத்தொடு கரங்களைப்
     புடைத்து, கண்களில்
நெருப்பு எழ விழித்து, வாய்
     மடித்து, நிற்கின்றார்.

    அரக்கரும் - இராக்கதர்களும்; பொருக்கென நோக்கினர் -
(சூர்ப்பணகையைத்) திடீரென்று பார்த்தவர்களாய்; புகல்வது ஓர்கிலர் -