இன்னது கூறுவதென அறியாது; அசனி ஆம் என இரைத்தனர் - இடி முழக்கம் போலக் கதறி ஒலி செய்து; கரத்தொடு கரங்களைப் புடைத்து - கைகளோடு கைகளை அறைந்து கொண்டு; கண்களில் நெருப்பு எழ விழித்து - கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழித்துப் பார்த்து; வாய் மடித்து நிற்கின்றார் - உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றார்கள். 27 | 3094. | 'இந்திரன் மேலதோ? உலகம் ஈன்ற பேர் அந்தணன் மேலதோ? ஆழி யானதோ? சந்திர மௌலிபால் தங்குமே கொலோ, அந்தரம்?' என்று நின்று அழல்கின்றார் சிலர். |
சிலர் - அரக்கர் சிலர்; அந்தரம் - தீமையானது; இந்திரன் மேலதோ - தேவேந்திரன் மீதில் அமையுமோ?; உலகம் ஈன்ற பேர் அந்தணன் மேலதோ - உலகைப் படைத்த பிரமன்மீதில் அமையுமோ?; ஆழியானதோ - சக்கரப்படை கொண்ட திருமால் மீதில் அமையுமோ?; சந்திர மௌலிபால் தங்குமே கொலோ - சந்திரனை முடியில் தரித்த சிவனிடத்தில் தங்கி அமையுமோ?; என்று நின்று அழல்கின்றார் - என்று சொல்லி நின்று மனக் கொதிப்புற்றார்கள். சந்திரமௌலி - வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஆழியான் என்னும் சொற்கு பாற் கடலிடத்தான் என்றும் நீலக்கடல் போலும் மேனியான் என்றும் பொருள் கூறலாம். 28 | 3095. | 'செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர்? முப் புறத்து உலகமும் அடங்க மூடிய இப் புறத்து அண்டத்தோர்க்கு இயைவதுஅன்று இது; அப்புறத்து அண்டத்தோர் ஆர்?' என்றார் சிலர். |
செப்புறற்கு உரியவர் தெவ்வர் - குறித்துச் சொல்லத்தக்க பகைவர்; யார் உளர்? - (இராவணனுக்கு) யாவர் உள்ளார்?; முப்புறத்து உலகமும் அடங்க மூடிய - மூவகை உலகம் முற்றிலும் உள்ளடங்கும் படி கவிந்த; இப்புறத்து அண்டத்தோர்க்கு - இவ்வண்ட கோளத்தில் உள்ளவர்களுக்கு; |