பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 387

இது இயைவது அன்று - இவ்வாறு செய்தல் சாத்தியமன்று; அப்புறத்து
அண்டத்தோர் ஆர்? -
வேறு அண்டத்தில் உள்ளவர் யார் இது
செய்திருப்பார்?; என்றார் சிலர் - என்று பேசினர் சில அரக்கர்கள்.

     அப்புறத்தண்டம் - பகிரண்டம், வெளியண்டம்.              29

3096.'என்னையே! "இராவணன்
     தங்கை" என்றபின்,
"அன்னையே" என்று, அடி
     வணங்கல் அன்றியே,
உன்னவே ஒண்ணுமோ,
     ஒருவரால்? இவள்
தன்னையே அரிந்தனள்,
     தான்' என்றார் சிலர்.

    என்னையே - (இது) என்ன வியப்பு!; இராவணன் தங்கை
என்றபின் -
இராவணன் தங்கை இவளென உணர்த்திய பின்; அன்னையே
என்றடி வணங்கல் அன்றியே -
(யாவராயினும்) 'எம் தாயே' என்று
வழிபடுவதே அல்லாமல்; ஒருவரால் உன்னவே ஒண்ணுமோ? -
எவராலும் தீமை செய்ய நினைக்கவும் முடியுமோ?; (ஆதலால்); இவள்
தன்னையே தான் அரிந்தனள் -
இச்சூர்ப்பணகை தன்னைத் தானே
உறுப்புக்களை அறுத்துக் கொண்டாளாதல் வேண்டும்; என்றார் சிலர் -
என்று சில அரக்கர் கூறிக் கொண்டனர்.

     இராவணன் தங்கையென அறிந்தும் தீங்கு இழைப்பார் இரார் எனக்
கருதி இவ்வாறு உரைத்தனர்.                                    30

3097.'போர் இலான் புரந்தரன்,
     ஏவல் பூண்டனன்;
ஆர் உலாம் நேமியான்,
     ஆற்றல் தோற்றுப்போய்
நீரினான்; நெருப்பினான்,
     பொருப்பினான்; இனி
ஆர் கொலாம் ஈது?' என,
     அறைகின்றார் சிலர்.

    புரந்தரன் - இந்திரன்; போர் இலான் - (இராவணனுடன்) போர்
செய்யமாட்டாதவனாய்; ஏவல் பூண்டனன் - அடிமைத் தொழில்
பூண்டான்; ஆர் உலாம் நேமியான் - ஆரங்கள் கொண்ட சக்கரப் படை
ஏந்திய திருமால்; ஆற்றல் தோற்றுப் போய் - வலிமை அழிந்து
போனவனாய்;