பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 389

எவரேனும் இத்தகைய பைத்தியக்காரச் செயலைச் செய்யவும்
துணிந்தனரோ?; பிழைப்பு இல் சூழ்ச்சியார் - (அவ்வாறு செய்திருப்பின்)
பிழைத்து வாழும் ஆலோசனை அற்றவர்களாய்; முத்திறத்து
உலகையும் முடிக்க எண்ணுவார் -
(தாம் மட்டுமன்றி) மூவகை
உலகங்களையும் அழித்தொழிக்க எண்ணியவர்களாய்; இத்திறம்
புணர்த்தனர் -
இவ்வாறு அழிவைத் தரும் செயல் செய்தனர் போலும்;
என்கின்றார் சிலர் - எனச் சில அரக்கர் கூறலாயினர்.

     பித்துற்றார் பேரழிவை அறியாராய் இவ்வாறு செய்திருக்கலாம் எனச்
சிலர் கருதினர்.                                              33

3100.'இனி ஒரு கற்பம்
     உண்டுஎன்னின் அன்றியே,
வனை கழல் வயங்கு வாள்
     வீரர் வல்லரோ?
பனி வரும் கானிடைப் பழிப்பு
     இல் நோன்புடை
முனிவரர் வெகுளியின் முடிபு'
     என்றார் சிலர்.

    இனி ஒரு கற்பம் உண்டு என்னின் அன்றியே - இனி வேறொரு
ஊழிக்காலம் உண்டானால் அன்றி; வனை கழல் வயங்கு வாள் -
புனைந்த வீரக் கழலையும், விளங்கும் வாளையும் உடைய; வீரர்
வல்லரோ? -
(இந்நாளில் வாழும்) வீரர் இச் செயல் செய்ய வல்லமை
உடையவர்களோ? (இலர்); (ஆதலால்); பனி வரும் கானிடை - அச்சம்
உண்டாகும் காட்டில்; பழிப்பில் நோன்புடை முனிவரர் - குற்றமற்ற
தவம்செய்யும் தவசிகள் கொண்ட; வெகுளியின் முடிபு - சினத்தின்
விளைவேயாகும்; என்றார் சிலர் - என்று சிலர் கூறினார்கள்.

     கற்பம் - ஊழிக்காலம்;                                  34

3101. கரை அரு திரு நகர்க்
     கருங் கண் நங்கைமார்
நிரை வளைத் தளிர்க் கரம்
     நெரித்து நோக்கினர்;
பிரை உறு பால் என,
     நிலையின் பின்றிய
உரையினர், ஒருவர்முன்
     ஒருவர் ஓடினார்.

    கரை அரு திரு நகர் - கடற் கரையில் அரிதின் அமைந்த செல்வம்
மிக்க இலங்கையின்; கருங்கண் நங்கைமார் - கரிய கண்கள் கொண்ட