பக்கம் எண் :

சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 39

     பொதுவாக வாழ்க்கையையே 'கள்ள மாயவாழ்வு' எனக் குறித்தான்
எனலுமாம், வீசுதல்-போய்ப் பரவி வீழச் செய்தல். தன் சாபத்தைப் போக்கி
அறியாமையை நீக்கி ஞானத்தைஅருளியதால் வள்ளல் என்றான்.       62

2579.இம்பர் உற்று இது எய்தினேன்
வெம்பு விற்கை வீர! பேர்
தும்புரு; தனதன் சூழ்
அம்பரத்து உளேன் அரோ!

    வெம்பு வில் கை வீர - கொடுமையுடைய வில்லைக் கையில் ஏந்திய
வீரனே!; இம்பர் உற்று இது எய்தினேன் - இவ்வுலகை அடைந்து இவ்
வரக்கப் பிறவியை அடைந்தேன்; பேர் தும்புரு - என் பெயர்தும்புரு
என்பதாம்; தனதன் சூழ் அம்பரத்து உளேன் - குபேரன் ஆட்சிக்கு
உட்பட்டவானுலகில் உள்ளவன் நான்.

     தனதன் - செல்வத்திற்குரியவன், குபேரன். இராமனின் வில்லாற்றலை
நேரே அனுபவித்தவிராதன் 'வெம்பு வில்' என்றான். அம்பரம் -
ஆகுபெயர்.                                                  63

2580.கரக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான்
அரக்கன் மைந்தன் ஆயினேன்

    கரக்க வந்த காம நோய் துரக்க வந்த தோமினால் - அறிவை
மறைக்க வந்த காமமாம் பிணி தொடர்தலால் உண்டான குற்றத்தால்; இரக்க
மின்றி ஏவினான் -
கருணையின்றி அரக்கனாகும்படி சபித்தார். (ஆதலால்);
அரக்கன் மைந்தன்ஆயினேன் - இராக்கத குலத்தில் பிறந்த மகன்
ஆனேன்.

     தான் அடைந்த இடத்தை மேலும் வருத்துதலால் காமத்தை நோய்
என்றார் சாபம் கொடுத்ததுகுபேரனாம். தோம் - குற்றம்.             64

2581.அன்ன சாபம் மேவி நான்
"இன்னல் தீர்வது ஏது" எனா
"நின்ன தாளின் நீங்கும்" என்று
உன்னும் எற்கு உணர்த்தினான்

    நான் அன்ன சாபம் மேவி- நான் அச்சாபத்தை அடைந்து; இன்னல்
தீர்வது ஏது எனா -
இத்துன்பமாம் சாபம் எனக்குத்தீர்வது எவ்வாறு என
நான் கேட்க; நின்ன தாளின் நீங்கும் என்று - உன்னுடைய திருவடிபடும்
அளவில் இச்சாபம் என்னை விட்டு நீங்கும் என்று; உன்னும் எற்கு
உணர்த்தினான் -
ஆராய்ந்து நோக்கும் எனக்குத் (குபேரன்) தெரிவித்தான்.