பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 391

     வெள்ளமும் நாண்உற - பெருங்கடலும் தோற்றுப்போகும் படி;
விரிந்த கண்ணினார் - விரிந்த கண்களையுடைய அரக்க மகளிர்;
கள்ளுடை வள்ளமும் - (தாம் அருந்தும்) மதுக் கிண்ணங்களும்; களித்த
தும்பியும் -
மதுவை மொய்த்து ஆரவாரிக்கும் வண்டுகளும்; உள்ளமும் -
மதுவில் ஈடுபட்ட மனமும் (ஆகியவற்றை); ஒருவழிக் கிடக்க - ஒரு
புறத்திலே விட்டு விட்டு; ஓடினார் - ஓடிச் சென்றார்; தள்ளுறும்
மருங்கினர் -
துவண்ட இடையினை உடையராய்; தழீஇக் கொண்டு
ஏகினார் -
(ஒருவரை யொருவர்) தழுவிக் கொண்டு செல்லலாயினர்.

     இனி, சூர்ப்பணகை நிலை கண்டு கண்ணீர் வெள்ளம் பொழிந்த
கண்களோடு, மது முதலியவற்றை ஒதுக்கிவிட்டு, அவளைத் தழுவிச்
சென்றனர் எனவும் கூறுவர்.                                     37

3104.நாந்தக உழவர்மேல்
     நாடும் தண்டத்தர்,
காந்திய மனத்தினர்,
     புலவி கைம்மிகச்
சேந்த கண் அதிகமும்
     சிவந்து நீர் உக,
வேந்தனுக்கு இளையவள்
    தாளில் வீழ்ந்தனர்.

    (வேறு சில பெண்கள்); நாந்தக உழவர் மேல் - வாள் உழவரான
தம் கணவர்மேல்; நாடும் தண்டத்தர் - (ஊடல் காரணமாக) தண்டனை தர
விரும்பியவர்களாய்; காந்திய மனத்தினர் - எரியும் நெஞ்சினராய்; புலவி
கைம்மிக -
ஊடல் மிகக் கொண்டு; சேந்த கண், - சினத்தால் சிவந்த
கண்கள்; அதிகமும் சிவந்து நீர் உக - (இப்போது சூர்ப்பணகையைக்
கண்டு) மேலும் கலங்கிச் சிவந்து கண்ணீர் சிந்த; வேந்தனுக்கு
இளையவள் -
இராவணன் தங்கையின்; தாளில் வீழ்ந்தனர் - பாதங்களில்
வீழ்ந்தனர்.                                                   38

3105.பொன்-தலை மரகதப்
     பூகம் நேர்வு உறச்
சுற்றிய மணிவடம்
     தூங்கும் ஊசலின்
முற்றிய ஆடலில்
     முனிவுற்று ஏங்கினார்,
சிற்றிடை அலமரத்
     தெருவு சேர்கின்றார்.