(மற்றும் சில மகளிர்); பொன்தலை மரகதப் பூகம் - பொன்னாய்ப் பழுத்த காய்கள் குலுங்கும் பச்சை நிறக் கமுக மரங்களின்; நேர்வுறச் சுற்றிய - (கழுத்து) நோகும்படியாகக் கட்டப்பட்டுள்ள; மணிவடம் தூங்கும் ஊசலின் - மணிகள் பதித்த கயிற்றில் தொங்கும் ஊஞ்சலில் அமர்ந்து; முற்றிய ஆடலில் முனிவுற்று - முனைப்பாக ஆடிக் கொண்டிருந்த ஆடலை (சூர்ப்பணகையைக் கண்டதால்) வெறுத்து; ஏங்கினார் - துயரம் கொண்ட நிலையில்; சிற்றிடை அலமர - மெல்லிடை நோகும் படி; தெருவு சேர்கின்றார் - தெருக்களில் சென்று கூடினர். ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ள அழகும், அதற்கு மாறான சோகமும் முரணுற அமைந்துள்ளன. 'பூகம் நோவுற' என்னும் கூற்று மரங்களுக்கும் உயிருண்டு என்ற சிந்தனையைப் புலப்படுத்திற்று. 39 | 3106. | எழு என, மலை என, எழுந்த தோள்களைத் தழுவிய வளைத் தளிர் நெகிழ, தாமரை முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள் பொழிதர, சிலர் உளம் பொருமி விம்முவார். |
சிலர் - வேறு சில பெண்கள்; எழு என - தூண் போன்ற; மலை என - குன்று போன்ற; எழுந்த தோள்களை - (தம் நாயகரின்) உயர்ந்த தோள்களை; தழுவிய வளைத் தளிர் நெகிழ - அணைத்திருந்த தளிர் போன்ற வளையணிந்த கரங்கள் நெகிழ்ச்சியடையவும்; தாமரை முழு முகத்து - தாமரை போன்ற எழில் மிக்க முகத்திலுள்ள; இரு கயல் - கயல்மீன் போன்ற இரு கண்களிலும்; முத்தின் ஆலிகள் பொழிதர - முத்துப் போன்ற கண்ணீர்த் துளிகள் சிந்தவும்; உளம் பொருமி விம்முவார் - மனம் விம்மி அழத் தொடங்கினார்கள். தழுவிய கணவரையும் நெகிழவிட்டு அழுத பெண்களின் செயலைக் கூறினார். 40 கலிவிருத்தம் (வேறு) | 3107. | 'நெய்ந் நிலைய வேல் அரசன், நேருநரை இல்லான், இந் நிலை உணர்ந்த பொழுது, எந் நிலையம்?' என்னா, மைந் நிலை நெடுங் கண் மழை வான் நிலையது ஆக, பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர், புரண்டார். |
|