ஐயா - ஐயனே; ஓர் உலகில் வாழ்வார் - ஒரே உலகின்கண் வாழ்கின்றவர்களாய்; இருவர் மாரர் உளரே? - இரண்டு மன்மதர்கள் இருக்கின்றார்களா?; அவரின் வில்லதனில் வல்லார் - அவர்களைக் காட்டிலும் வில் வலிமையில் வல்லவர்; வீரர் உளரே - (வேறு) வீரர்களும் இருக்கின்றார்களா?; ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஆர் - அவர்களுக்குச் சமானமாக உள்ளவர் எவரேனும் உண்டா?; ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் - அவர்களில் ஒவ்வொருவருமே மும்மூர்த்திகளுக்கு நிகரானவர்களாய் இருப்பார்கள். மும்மூர்த்திகளும் சேர்ந்தால் இவர்களில் ஒருவருக்குச் சமமாவர் என இவர்களை உயர்த்திக் கூறினாள்.55 | 3122. | "ஆறு மனம் அஞ்சினம், அரக்கரை" எனச் சென்று ஏறு நெறி அந்தணர் இயம்ப, "உலகு எல்லாம் வேறும்" எனும் நுங்கள் குலம், "வேரொடும் அடங்கக் கோறும்" என, முந்தை ஒரு சூளுறவு கொண்டார். |
ஏறு நெறி அந்தணர் - மேலான நெறியில் வாழும் முனிவர்கள்; ஆறுமனம் அஞ்சினம் அரக்கரை - அடக்கம் மிக்க எங்கள் மனம் அரக்கர்களைக் கண்டு அஞ்சுகிறது; எனச் சென்று இயம்ப - என்று (அம்மானிடரிடம்) சென்று சொல்லவும் (அம்மனிதர்கள்); உலகு எல்லாம் வேறும் எனும் - அனைத்து உலகங்களையும் நாங்கள் வெல்வோம் என்று கூறும்; நுங்கள் குலம் - அரக்கர்களாகிய உங்கள் வமிசத்தை; வேரொடும் அடங்கக் கோறும் என - வேரோடு அழித்து முடிப்போம் என்று; முந்தை ஒரு சூளுறவு கொண்டார் - முன்பு ஒரு சபதம் செய்துள்ளனர். அகத்தியப் படலத்தில் முனிவர்க்கு அபயம் தந்த செயல் கூறப்பட்டுள்ளது. ஆறு மனம் - வினைத் தொகை. 56 | 3123. | 'தராவலய நேமி உழவன், தயரதப் பேர்ப் பராவ அரு நலத்து ஒருவன், மைந்தர்; பழி இல்லார்; விராவ அரு வனத்து, அவன் விளம்ப, உறைகின்றார்; இராமனும் இலக்குவனும் என்பர், பெயர்' என்றாள். |
|