(அவர்கள்) தரா வலய நேமி உழவன் - பூமி முழுவதையும் தன் ஆட்சிச் சக்கரத்தால் கட்டுப்படுத்தியவனான; தயரதப் பேர் - தயரதன் என்னும் பெயரை உடைய; பராவரு நலத்து ஒருவன் - புகழ்ந்துரைக்க ஒண்ணாத சிறப்புக்கள் கொண்ட ஒரு மன்னனது; மைந்தர் - மக்கள்; பழி இல்லார் - பழி கூறலாகாத சிறப்புடையவர்; அவன் விளம்ப - அத் தயரதன் இட்ட கட்டளையால்; விரா வரு வனத்து உறைகின்றார் - நெருங்குதற்கு அரிய காட்டில் வசிக்கின்றார்கள்; பெயர் இராமனும் இலக்குவனும் என்பர் - அவர்கள் முறையே இராமன் என்றும் இலக்குவன் என்றும் பெயருடையார்; என்றாள் - என்று (சூர்ப்பணகை) கூறினாள். இராமலக்குவர் வனம் புகுந்த வரலாறு கூறினாள். 57 இராவணன் தன்னைத் தானே பழித்துக் கூறுதல் | 3124. | 'மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் அரிந்தவரும் மானிடர்; அறிந்தும், உயிர் வாழ்வார்; விருந்து அனைய வாளொடும், விழித்து, இறையும் வெள்காது. இருந்தனன் இராவணன் இன் உயிர்கொடு, இன்னும். |
மருந்தனைய தங்கை - அமுதம் போல் அடியவளான தங்கை சூர்ப்பணகையின்; மணிநாசி - அழகிய மூக்கை; வடிவாளால் அரிந்தவரும் - கூர்வாள் கொண்டு அறுத்தெறிந்தவர்களும்; மானிடர் - (இழிந்த) மனிதர்களே ஆவர்; அறிந்தும் உயிர் வாழ்வார் - (அங்ஙனம்) தாக்கப்பட்டாள் என் தங்கை என அறிந்த பின்னும் உயிர் பிழைத்திருந்தனர்; இராவணன் - இராவணனாகிய நான்; விருந்தனைய வாளொடும் - புதிது போலும் என் வாளொடும்; இன்னும் விழித்து - இன்னும் விழித்துக் கொண்டு; இறையும் வெள்காது - சற்றும் வெட்கமின்றி; இன்னுயிர் கொடு - இனிய உயிரைச் சுமந்து கொண்டு; இருந்தனன் - இருக்கின்றேன்! மனிதர்கள் தீங்கிழைத்த பின்னும் அவர்களை மாய்க்காமல் இருக்கும் தன்னையே நொந்து கொள்கிறான் இராவணன். 58 | 3125. | 'கொற்றம்அது முற்றி, வலியால் அரசு கொண்டேன்; உற்ற பயன் மற்று இதுகொலாம்? முறை இறந்தே |
|