| | தத்துறுவது என்னை? மனனே! தளரல் அம்மா! எத் துயர் உனக்கு உளது? இனி, பழி சுமக்க, பத்து உள தலைப் பகுதி; தோள்கள் பல அன்றே? |
மனனே - என் உள்ளமே! உடல் பொத்துறப் பழி புகுந்தது - உடலையும் துளைத்துப் பழி சென்று நின்றது; என நாணி - என்று வெட்கமுற்று; தத்துறுவது என்னை? - ஏன் தடுமாறுகிறாய்?; தளரல் - சோர்வடையாதே; உனக்கு எத்துயர் உளது? - உனக்கு அவமானம் சுமக்கும் எவ்விதத் துன்பமும் வேண்டியதில்லை (ஏனெனில்); இனிப் பழி சுமக்க - இனிமேல் அப்பழியைத் தாங்க; பத்துள தலைப்பகுதி - தலைகள் பத்து உள்ளன; தோள்கள் பல அன்றே - தோள்களும் பல உள்ளன அன்றோ? அம்மா - இடைச் சொல் பழி தீர்க்க வேண்டிய தலைப் பாரமும், தோள் வலிமையும் உண்டென மொழிகின்றான். 61 கரன் முதலியோர் பற்றி இராவணன் வினவல் | 3128. | என்று உரைசெயா, நகைசெயா, எரி விழிப்பான், 'வன் துணை இலா இருவர் மானிடரை வாளால் கொன்றிலர்களா, நெடிய குன்றுடைய கானில் நின்ற கரனே முதலினோர் நிருதர்?' என்றான். |
என்று உரை செயா - எனக் கூறி; நகை செயா - சிரித்து; எரி விழிப்பான் - நெருப்பெழ விழித்து (இராவணன்); நெடிய குன்றுடைய கானில் - பெரு மலை சூழ்ந்த கானகத்தில்; நின்ற கரனே முதலினோர் நிருதர் - காவலில் நிலை பெற்ற கரன் முதலாகிய அரக்க வீரர்கள்; வன்துணை இலா இருவர் மானிடரை - பெருந்துணை ஏதும் இல்லாமல் எதிர்த்த அவ்விரு மனிதர்களை; வாளால் கொன்றிலர்களா? - வாள் வீசிக் கொல்ல வில்லையா?; என்றான் - என்று வினவினான். துணை வலிமையும் இல்லாதவர்களை ஆயுத வலிமை கொண்டோர் தோற்பிக்க வில்லையா என்றான். 62 |