பக்கம் எண் :

406ஆரணிய காண்டம்

மூன்றே நாழிகையில்; ஏறினர் விண்ணில் என்றாள் - இறந்து
விண்ணுலகடைந்தனர் எனக் கூறினாள்.

     இராமன் வில்லாற்றல் விளங்க, சென்றவர் மூன்றே நாழிகையில்
மடிந்தார் என விரைவு தோன்றக் கூறினாள். இந்த நிலையிலும் கூட
இராமன் அழகிலும் வீரத்திலும் சூர்ப்பணகை கொண்ட கவர்ச்சி தெளிவாக
விளங்குகிறது.                                                64

3131. தாருடைத் தானையோடும் தம்பியர்,
     தமியன் செய்த
போரிடை, மடிந்தார் என்ற உரை
     செவி புகாதமுன்னம்,
காரிடை உருமின், மாரி
     கனலொடு பிறக்குமாபோல்
நீரொடு நெருப்புக் கான்ற, நிரை
     நெடுங் கண்கள் எல்லாம்.

    தமியன் செய்த போரிடை - இராமன் ஒருவனாகவே செய்த
போரில்; தாருடைத் தானையோடும் தம்பியர் - மாலைகள் சூடிய
வீரர்களோடு கரன் முதலிய தம்பிமார்கள்; மடிந்தார் - மரணமுற்றார்;
என்ற உரை - என்னும் மொழி; செவி புகாத முன்னம் - தன் காதில்
விழு முன்னர்; காரிடை மாரி - மேகங்களில் பிறந்த மழை; உருமின்
கனலொடு -
இடி மின்னல் நெருப்புக்களோடு; பிறக்குமா போல் -
தோன்றினாற் போல; நிறை நெடுங் கண்கள் எல்லாம் - நிறைந்த பெரிய
கண்கள் எல்லாவற்றிலும்; நீரொடு நெருப்புக் கான்ற - கண்ணீரும் கனலும்
வீசின.

     சோகத்தால் கண்ணீரும், கோபத்தால் நெருப்பும் பிறந்தமைக்கு
மழையும் இடி மின்னல்களும் பிறந்த மேகத்தை உவமையாக்கினார்.     65

இராவணன் வினாவும் சூர்ப்பணகை விளக்கமும்

3132. ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய
     துன்பம் மாறி,
தீயிடை உகுத்த நெய்யின்,
     சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,
'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல்,
     நின்னை, இன்னே,
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து
     அவர் கொய்ய?' என்றான்.

    ஆயிடை - அவ்வமயம்; எழுந்த சீற்றத்து - உண்டாகிய
கோபத்தில்; அழுந்திய துன்பம் மாறி - அனுபவித்த துயரம் நீங்கி;
தீயிடை உகுத்த