| | தேர், அவள் அல்குல்; கொங்கை, செம் பொன் செய் குலிகச் செப்பு; பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் படைத்தது அம்மா! பேர் அவள், சீதை' என்று வடிவு எலாம் பேசலுற்றாள் : |
(அது கேட்டு ஆர்வமுற்ற இராவணன்) ஆர் அவள் என்ன லோடும் - அந்தப் பெண் யார் என்று கேட்டவுடன்; அரக்கியும் - சூர்ப்பணகையும்; ஐய - ஐயனே; அவள் அல்குல் ஆழித்தேர் - அவளுடைய அல்குல் சக்கரம் பூட்டிய தேர் போலும்; கொங்கை செம் பொன் செய் குலிகச் செப்பு - அவளுடைய மார்பகங்கள் தங்கத்தால் செய்யப்பட்ட குங்குலியச் செப்புப் போலும்; அவள் பாதம் தீண்டப் பார் பாக்கியம் படைத்தது - அவள் திருவடி பட பூமி புண்ணியம் செய்தது போலும்; அம்மா - வியப்பு இது; அவள் பேர் சீதை - அவள் பெயரோ சீதையாம்; என்று வடிவெலாம் பேசலுற்றாள் - எனச் சீதையின் அழகு நலங்களை உரைக்கத் தொடங்கினாள். இராவணன் ஆசைத் தீயை வளர்க்க நெய் சொரிந்தாற் போல் இவ்வங்க வருணனைகள் அமைந்துள்ளன. 68 | 3135. | 'காமரம் முரலும் பாடல், கள், எனக் கனிந்த இன் சொல்; தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் அணங்கு ஆம்" என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ? |
(அவளுடைய) கள் எனக் கனிந்த இன்சொல் - மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய மொழிகள்; காமரம் முரலும் பாடல் - காமரம் என்னும் பண்ணிசை கமழும் பாடலை ஒக்கும்; தேமலர் நிறைந்த கூந்தல்- இனிய மலர்கள் சூடப் பெற்ற கூந்தலை உடைய (அவள்); தேவர்க்கும் அணங்கு ஆம் - தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம்; என்ன - என்று சொல்லும்படி; தாமரை இருந்த தையல் - தாமரை மலரில் வசிக்கும் திருமகளும்; சேடி ஆம் தரமும் அல்லள் - தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள்; யாம் உரை வழங்கும் என்பது - அவளுடைய அழகைக் குறித்து நான் எடுத்துச் சொல்லக் கருதுவது; ஏழைமைப் பாலது அன்றோ?- அறியாமையின் பாற்பட்டது ஆகும் அன்றோ? |