பக்கம் எண் :

சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 41

     தீதெலாம் - ஒருமை, பன்மை மயக்கம்.                      68

இராமன் முதலியோர் முனிவர் வாழும் சோலையை அடைதல்

2585.'தேவு காதல் சீரியோன்
ஆவி போயினான்' எனா,
பூ உலாவு பூவையோடு
ஏ வலாரும் ஏகினார்

    தேவு காதல் சீரியோன் ஆவி போயினான் எனா - தேவரும்
விரும்பத்தக்க சிறப்புள்ள விராதன் உயிர் நீங்கினான் என்று; பூ உலாவு
பூவையோடுஏவலாரும் ஏகினார் -
தாமரைப் பூவில் வாழும் திருமகளாம்
சீதையுடன், அம்புப் போர் செய்யவல்ல இராமலக்குவர் அவ்விடம் விட்டுச்
சென்றார்.

     பூ உலாவு பூவை - தாமரை மலரில் வாழும் திருமகள். பூ - அழகு,
பொலிவுமாம். பூவை -நாகணவாய்ப் பறவை போன்ற சீதை; விராதன்
செயலால் அஞ்சிப் பொலிவிழந்த சீதை அவன்அழிந்ததும் மீண்டும்
பொலிவுற்றாள். ஏவலார் - எல்லா உலகங்களையும் அடிமையாகக் கொண்டு
ஆணைசெலுத்த வல்லவர் என்றுமாம்.                            69

2586.கை கொள் கால வேலினார்
மெய் கொள் வேத மெய்யர் வாழ்
மொய் கொள் சோலை, முன்னினார்;
வைகலானும் வைகினான்

    கைகொள் காலவேலினார் - கையில் ஏந்திய யமன் போல் கொடிய
வேலையுடைய இராமலக்குவர்; மெய்கொள் வேத மெய்யர்வாழ் மொய்
கொள் சோலை முன்னினார் -
மெய்யாகிய வேதமே வடிவெடுத்த
தவமுனிவர்வாழ்கின்ற மரங்கள் அடர்ந்த சோலையை அடைந்தனர்;
வைகலானும் வைகினான் - நாளின்தலைவனாம் பகலவனும் மறைந்தான்.

     வைகல் - பகல், வைகலான் பகலவன் என்ற பொருளில் சூரியனைக்
குறித்தது. வேல் -படைகளின் பொதுப் பெயராய் வந்தது. பகைவர் உயிரைக்
கவர்வதால் வேல் யமனுக்கு ஒப்பாம்.வாழ்வோர் காலத்தை வரையறுப்பவன்
ஆதலால் காலன் எனப்பட்டான் யமன். வேத விதிப்படிகருமங்களைத்
தவறாது செய்பவர் ஆதலின் வேத மெய்யர் என்பர்.                 70