தீதெலாம் - ஒருமை, பன்மை மயக்கம். 68 இராமன் முதலியோர் முனிவர் வாழும் சோலையை அடைதல் 2585. | 'தேவு காதல் சீரியோன் ஆவி போயினான்' எனா, பூ உலாவு பூவையோடு ஏ வலாரும் ஏகினார் |
தேவு காதல் சீரியோன் ஆவி போயினான் எனா - தேவரும் விரும்பத்தக்க சிறப்புள்ள விராதன் உயிர் நீங்கினான் என்று; பூ உலாவு பூவையோடுஏவலாரும் ஏகினார் - தாமரைப் பூவில் வாழும் திருமகளாம் சீதையுடன், அம்புப் போர் செய்யவல்ல இராமலக்குவர் அவ்விடம் விட்டுச் சென்றார். பூ உலாவு பூவை - தாமரை மலரில் வாழும் திருமகள். பூ - அழகு, பொலிவுமாம். பூவை -நாகணவாய்ப் பறவை போன்ற சீதை; விராதன் செயலால் அஞ்சிப் பொலிவிழந்த சீதை அவன்அழிந்ததும் மீண்டும் பொலிவுற்றாள். ஏவலார் - எல்லா உலகங்களையும் அடிமையாகக் கொண்டு ஆணைசெலுத்த வல்லவர் என்றுமாம். 69 2586. | கை கொள் கால வேலினார் மெய் கொள் வேத மெய்யர் வாழ் மொய் கொள் சோலை, முன்னினார்; வைகலானும் வைகினான் |
கைகொள் காலவேலினார் - கையில் ஏந்திய யமன் போல் கொடிய வேலையுடைய இராமலக்குவர்; மெய்கொள் வேத மெய்யர்வாழ் மொய் கொள் சோலை முன்னினார் - மெய்யாகிய வேதமே வடிவெடுத்த தவமுனிவர்வாழ்கின்ற மரங்கள் அடர்ந்த சோலையை அடைந்தனர்; வைகலானும் வைகினான் - நாளின்தலைவனாம் பகலவனும் மறைந்தான். வைகல் - பகல், வைகலான் பகலவன் என்ற பொருளில் சூரியனைக் குறித்தது. வேல் -படைகளின் பொதுப் பெயராய் வந்தது. பகைவர் உயிரைக் கவர்வதால் வேல் யமனுக்கு ஒப்பாம்.வாழ்வோர் காலத்தை வரையறுப்பவன் ஆதலால் காலன் எனப்பட்டான் யமன். வேத விதிப்படிகருமங்களைத் தவறாது செய்பவர் ஆதலின் வேத மெய்யர் என்பர். 70 |