இழுதைச் சொல் - என்று சொல்லப்படும் இச் செய்தி பொய்ச் செய்தியாகும்; (உண்மை யாதெனில்); இவ் வாசம் நாறு ஓதியானை - இந்த மணம் கமழும் கூந்தலுடைய சீதையை; கண்டனன் - கண்டு (மோகமுற்று) ; வவ்வல் ஆற்றான் - கவர்ந்து செல்ல இயலாதவனாகி; பேசல் ஆம் தகைமைத்து அல்லா - வெளியே சொல்லவும் முடியாத; பெரும் பிணி பிணிப்ப - காமப் பெரு நோய் பற்றிக் கொள்ள; நீண்ட ஆசையால் - மிகுதியான ஆசையினாலே; அவ் வுருவம் அழிந்து தேய்ந்தான் - அழகிய மேனி மெலிவுற்று அழிந்தான்; அம்மா - வியப்பு! உண்மையாக மன்மதன் உருவிலியான காரணம் ஒன்றாக இருக்க மற்றொன்றைக் காரணமாக்குதல் ஒழிப்பு அணி. சீதையைக் கவரும் ஆற்றல் மன்மதனுக்கு இல்லை என்று சொல்லி, அதனைச் செய்யுமாறு இராவணனை மறைமுகமாகத் தூண்டுகிறாள். 71 | 3138. | 'தெவ் உலகத்தும் காண்டி; சிரத்தினில் பணத்தினோர்கள் அவ் உலகத்தும் காண்டி; அலை கடல் உலகில் காண்டி; வெவ் உலை உற்ற வேலை, வாளினை, வென்ற கண்ணாள் எவ் உலகத்தாள்? அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதால்! |
வெவ் உலை உற்ற வேலை, வாளினை - வெப்பம் மிகுந்த கொல்லர் உலையில் உருவாக்கப்பட்ட வேல், வாள் முதலியவற்றைக் (கூர்மையால்); வென்ற கண்ணாள் - வெற்றி கொண்ட கண்களை உடையவள் (சீதை) ; எவ்வுலகத்தாள்? - எந்த உலகைச் சார்ந்தவளோ (அறியேன்); அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதால் - சித்திரத்தில் கூட யாராலும் இத்தகைய அழகு வடிவம் தீட்ட முடியாத சிறப்புடையாள்; தெவ் உலகத்தும் காண்டி - (இவளைப் போன்ற அழகுடையார் உண்டா என்று) பகைவர் உலகங்களிலும் தேடிக் காண்பாயாக; சிரத்தினில் பணத்தினோர்கள் அவ்வுலகத்தும் காண்டி - தலைகளில் படமேந்திய நாகர் உலகத்தும் தேடிக் காண்பாயாக; அலை கடல் உலகில் காண்டி - கடல் சூழ்ந்த பூவுலகிலும் தேடிக் காண்பாயாக. (எங்கும் இவளை ஒப்பாரைக் காணமாட்டாய்) இராவணன் ஆணை செல்ல வல்ல எவ்வுலகத்தும் இவளை நிகர்த்த அழகுடையார் இல்லை என்பதாம். 72 | 3139. | 'தோளையே சொல்லுகேனோ? சுடர் முகத்து உலவுகின்ற |
|