| | வாளையே சொல்லுகேனோ? அல்லவை வழுத்துகேனோ? மீளவும் திகைப்பதல்லால், தனித்தனி விளம்பல் ஆற்றேன்; நாளையே காண்டி அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னோ? |
தோளையே சொல்லுகேனோ? - (அவளுடைய) தோளின் அழகை எடுத்துக் கூறுவேனோ?; சுடர் முகத்து உலவுகின்ற வாளையே சொல்லுகேனோ? - ஒளி வீசும் முகத்தில் திரிகின்ற வாளை மீன் போன்ற கண்ணழகை எடுத்துக் கூறுவேனோ?; அல்லவை வழுத்துகேனோ? - அல்லாது பிற உறுப்புக்களை எடுத்துக் கூறுவேனோ?; மீளவும் திகைப்பது அல்லால் - மறுபடியும் திகைத்துப் போகின்றேனே அன்றி; தனித் தனி விளம்பல் ஆற்றேன் - ஒவ்வோர் உறுப்பழகையும் தனியே வருணிக்க வலிமை இல்லேன்; நான் உனக்கு உரைப்பது என்னோ? - நான் உனக்கு விவரித்துச் சொல்ல வேண்டுவது யாதுமில்லை; நாளையே காண்டி அன்றே - நாளைக்கு நீயே காணப் போகின்றாய் அல்லவா? இவ்வாறு கூறுவதன் மூலம் சீதையைக் காணும் ஆவலை இராவணன் உள்ளத்தே மூட்டுகின்றாள். 73 | 3140. | 'வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும், பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும், சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ? "நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ! |
வில் ஒக்கும் நுதல் என்றாலும் - வில்லைப் போல் நெற்றி அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்; விழி வேல் ஒக்கும் என்றாலும்- கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்; பல் முத்து ஒக்கும் என்றாலும் - பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று சொன்னாலும்; பவளத்தை இதழ் என்றாலும் - பவளமே இவள் இதழ்கள் என்று சொன்னாலும்; சொல் ஒக்கும் - உவமிக்கப்படும் சொல் பொருத்தம் ஆகலாம்; (அல்லாது); பொருள் ஒவ்வாதால் - (சீதையின் உறுப்பழகை உணர்த்தும் முழுமையான) பொருளால் பொருந்தாது; சொல்லல் ஆம் உவமை உண்டோ - (எனவே) சொல்லத்தக்க உவமை வேறு ஏதேனும் உளதாகுமோ? (இல்லை) ; புல் ஒக்கும் நெல் - புல்லைப் போன்றிருக்கும் |