பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 419

     அசோக வனத்துச் சிறைக்கு முன்பே மனச்சிறையில் வைத்தான் என
நயம்பட உரைத்தார்.                                          85

3152.விதியது வலியினாலும், மேல்
     உள விளைவினாலும்,
பதி உறு கேடு வந்து
     குறுகிய பயத்தினாலும்,
கதி உறு பொறியின் வெய்ய காம
     நோய், கல்வி நோக்கா
மதியிலி மறையச் செய்த தீமைபோல்,
     வளர்ந்தது அன்றே.

    விதியது வலியினாலும் - ஊழ்வினையின் ஆற்றலினாலும்; மேல்
உள விளைவினாலும் -
இனிமேல் அதனால் உண்டாக இருக்கிற
பயன்களாலும்; பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் - இலங்கை
மா நகருக்கு அழிவுக்குரிய நிலை ஏற்பட்டு நெருங்கியுள்ள பலன்களாலும்;
கதி உறு பொறியின் - விரைவாய் உற்று பொறிகளின் வழியே; வெய்ய
காம நோய் -
(இராவணனைப் பற்றிய) கொடிய காம நோயானது; கல்வி
நோக்கா மதியிலி -
கல்வி அறிவு அற்ற அறிவிலி ஒருவன்; மறையச்
செய்த தீமை போல் -
யாருமறியாமல் மறைவாகச் செய்த கெடுதி போல;
வளர்ந்தது - ஓங்கிப் பெருகியது; அன்றே - அசை.

     வேதவதி சாபம், வானரங்களால் இலங்கை அழிய வேண்டுமென நந்தி
இட்ட சாபம் முதலியனவெல்லாம் நிறைவேறத் தக்க காலம் நெருங்கியது.
ஞானமற்றவன் மறைவாகச் செய்த தீங்கும் விரைவாக வெளிப்படும் என்பது
தோன்றக் கூறினார்.                                            86

3153.பொன் மயம் ஆன நங்கை மனம்
     புக, புன்மை பூண்ட
தன்மையோ-அரக்கன் தன்னை
     அயர்த்தது ஓர் தகைமையாலோ-
மன்மதன் வாளி தூவி நலிவது
     ஓர் வலத்தன் ஆனான்?
வன்மையை மாற்றும் ஆற்றல்
     காமத்தே வதிந்தது அன்றே?

    பொன்மயமான நங்கை - (அழகு மிகுதியினால்) பொன்னின் ஒளி
சூழும் எழிலுடைய சீதை; மனம் புக - மனத்தில் புகுந்துவிட்டதனால்;
புன்மை பூண்ட தன்மையோ - (இராவணன்) இழிவடைந்து விட்டானோ?
(அல்லது); அரக்கன் - அவ்விராவணன்; தன்னை அயர்த்ததோர்
தகைமையாலோ -
தனக்குத் தானே மறந்துவிட்டதாகிய தன்மையினாலோ;