பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 421

     (அரண்மனையுட் புகுந்த இராவணன்); தேவிமார் குழுவும் நீங்க -
(தன்) மனைவியர் கூட்டத்திலிருந்து விலகியவனாய்; பூவினால் வேய்ந்து
செய்த -
மலர்கள் பரப்பி அமைக்கப்பட்ட; பொங்கு பேர் அமளிப்
பாங்கர் சேர்ந்தனன் -
உயர்ந்த பெரிய படுக்கையிடத்தில் சேர்ந்தான்;
சேர்தலோடும் - அவ்வாறு சேர்ந்த மாத்திரத்தில்; நாவி நாறு ஓதி நவ்வி
-
புனுகின் நறுமணம் வீசும் கூந்தலையுடைய மான் போன்ற சீதையினுடைய;
நயனமும் - கண்களும்; குயமும் - மார்பும்; புக்குப் பாவியா -
மனத்தினுள் பல்வகை நினைவுகளை ஊட்ட; கொடுத்த வெம்மை -
(அப்பாவனைகள்) தந்த உணர்ச்சி வெப்பம்; பயப்பயப் பரந்தது - சிறிது
சிறிதாக மிகுதிப்படலாயிற்று. (அன்றே - அசை).                   89

எழுசீர் ஆசிரிய விருத்தம்

3156. நூக்கல் ஆகலாத காதல் நூறு
     நூறு கோடி ஆய்ப்
பூக்க, வாச வாடை வீசு சீத நீர்
     பொதிந்த மென்
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள்
     எட்டும் வென்ற தோள்,
ஆக்கை, தேய, உள்ளம் நைய,
     ஆவி வேவது ஆயினான்.

    நூக்கல் ஆகலாத - ஒதுக்கி விலக்க முடியாத; காதல் - காம
விருப்பம்; நூறு நூறு கோடியாய்ப் பூக்க - அளவிட முடியாதபடி
பன்மடங்கு பெருகி மலர; வாச வாடை வீசு - நறுமணக் காற்றுப் பட்டு;
சீத நீர் பொதிந்த - குளிர்ந்த நீர்த் துளிகள் பொருந்திய; மென் சேக்கை
வீ -
மெல்லிய படுக்கையில் பரப்பிய பூக்கள்; கரிந்து - கருகிப்
போகும்படி; திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் ஆக்கை தேய -
எட்டுத் திசை யானைகளை வென்ற தோள்களும் உடலும் மெலிந்து
போகும்படி; உள்ளம் நைய - மனம் குழையும்படி; ஆவி வேவது
ஆயினான் -
(இராவணன்) தன் உயிரும் வெதும்பும் நிலை அடைந்தான்.

     நூறு நூறு கோடி என்றது அளவிட முடியாத என்ற பொருள் தந்தது.                                         90

3157. தாது கொண்ட சீதம் மேவு சாந்து,
     சந்த மென் தளிர்,
போது, கொண்டு அடுத்தபோது,
     பொங்கு தீ மருந்தினால்