| ஆணிப் பொன் வேங்கை; கோங்கம், அரவிந்தராகம்; பூகம் சேண் உய்க்கும் நீலம்; சாலம் குருவிந்தம்; தெங்கு வெள்ளி; பாணித் தண் பளிங்கு, நாகம்; பாடலம் பவளம் மன்னோ. |
(அச் சோலையில்); பனசம் மாணிக்கம் - பலா மரங்கள் மாணிக்க மயமாகவும்; வாழை மரகதம் - வாழை மரங்கள் மரகத மயமாகவும்; தேமா வயிரம் - இனிய மாமரங்கள் வைர மயமாகவும்; வேங்கை ஆணிப் பொன் - வேங்கை மரங்கள் உயர்வகைப் பொன் மயமாகவும்; கோங்கம் அரவிந்த ராகம் - கோங்கு மரங்கள் பதும ராகம் என்னும் இரத்தின மயமாகவும்; பூகம் சேண் உய்க்கும் நீலம் - கமுகு நெடுந்தொலைவு ஒளிரும் நீலமணி மயமாகவும்; சாலம் குருவிந்தம் - ஆச்சா மரங்கள் குருவிந்தம் என்னும் மணி மயமாகவும்; தெங்கு வெள்ளி - தென்னை மரங்கள் வெள்ளி மயமாகவும்; நாகம் பாணித் தண் பளிங்கு - சுர புன்னை மரங்கள் நீரோட்டம் மிக்க கண்ணாடி மயமாகவும்; பாடலம் பவளம் - பாதிரி மரங்கள் பவள மயமாகவும் (இருந்தன). (மன்னோ - அசை) இராவணனின் சோலை மரங்கள் தங்கம், மணிகள் மயமானவை என்று சுந்தரகாண்டச் செய்யுள் (4853) விளக்குகிறது. வினை முற்று வருவித்து முடிக்கப்பட்டது. 96 3163. | வான் உற நிவந்த செங் கேழ் மணி மரம் துவன்றி, வான மீனொடு மலர்கள் தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா, தேன் உகு, சோலைநாப் பண், செம்பொன் மண்டபத்துள், ஆங்கு ஓர் பால் நிற அமளி சேர்ந்தான்; பையுள் உற்று உயங்கி நைவான். |
வானுற நிவந்த செங் கேழ் - விண் தொடுமாறு உயர்ந்த அழகிய ஒளியுடைய; மணி மரம் - இரத்தின மயமான மரங்கள்; துவன்றி - நெருங்கி வளர்ந்து; வான மீனொடு மலர்கள் தம்மின் - விண் மீன்களுக்கும் மரங்களின் மலர்களுக்கும் இடையே; வேற்றுமை தெரிதல் தேற்றா - வேறுபாடு தெரிய முடியாதபடி (அமைந்திருக்கும்); தேன் உகு சோலை நாப்பண் - தேன் சிந்தும் சோலையின் நடுவே; செம்பொன் மண்டபத்துள் - தங்கமயமான மண்டபத்தில்; ஆங்கு ஓர் - அங்கே இடப்பட்ட ஒரு; பால் நிற அமளி சேரந்தான் - பால் போன்ற வெள்ளை நிறப் படுக்கையினை அடைந்த (இராவணன்); பையுள் உற்று - துயரம் வந்தடைய; உயங்கி நைவான் - நொந்து வருந்தினான். முதல் இரண்டடியில் உவமை அணி அமைந்துள்ளது.97 |