பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 429

தெரிவிக்க; (அது கேட்ட இராவணன்); இங்கு இருது யாதும் ஆகாது -
இனி இங்கு எவ்வகைப் பருவ காலமும் வருதல் கூடாது; யாவையும்
அகற்றும் என்றான் -
எல்லாப் பருவகாலங்களையும் நீக்கி விடுங்கள்' என
ஆணையிட்டான்.

     அனைத்துப் பருவகாலங்களையும் அகன்று போகுமாறு
கட்டளையிட்டான் இராவணன்.                                 102

3169. என்னலும், இருது எல்லாம் ஏகின;
     யாவும் தம்தம்
பன் அரும் பருவம் செய்யா,
     யோகிபோல் பற்று நீத்த;
பின்னரும், உலகம் எல்லாம், பிணி
     முதல் பாசம் வீசித்
துன் அருந் தவத்தின் எய்தும் துறக்கம்போல்,
     தோன்றிற்று அன்றே.

    என்னலும் - என இராவணன் ஆணை பிறப்பித்ததும்; இருது
எல்லாம் ஏகின -
எல்லாப் பருவங்களும் விலகிப் போயின; யாவும் -
ஆறு பருவ காலங்களும்; தம் தம் பன் அரும் பருவம் செய்யா - தத்
தமக்குரிய பருவ கால நிகழ்வுகளைச் செய்யாமல்; யோகி போல் பற்று
நீத்த -
தனக்குள் ஒடுங்கும் தவசி போல் செயல்பாடுகளைக் கைவிட்டன;
பின்னரும் உலகம் எல்லாம் - அதன் பின்பு அனைத்துலகும்; பிணி
முதல் பாசம் வீசி -
நோய் முதலிய வினைத் தொடர்புகளை ஒழித்து;
துன்னருந் தவத்தின் எய்தும் - செயற்கரிய தவத்தால் அடையத்தக்க;
துறக்கம் போல் தோன்றிற்று - முக்தி உலகம் போல் எவ்வித
மாறுபாடுமின்றி விளங்கலாயிற்று. அன்றே - ஈற்றசை.

     உலகம் செயலற்றுப் போன நிலையை இவ்வாறு கூறினார். இன்ப,
துன்பங்களுக்குக் காரணமாவன பருவங்கள். பருவங்கள்தொழிற்படாமையால்
இன்ப, துன்ப நிலைகளற்ற துறக்க உலகம் போலாயிற்றுஇலங்கை என்பது
கருத்து.                                                     103

3170. கூலத்து ஆர் உலகம் எல்லாம்
     குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க,
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய்
     இன்றி, எரிந்தது அன்றே-
காலத்தால் வருவது ஒன்றோ?
     காமத்தால் கனலும் வெந் தீ