வனத்தை; இரவு அங்கண் உகும் பொழுது எய்தினர் - இரவு நேரம் அவ்விடத்தே சேரும்பொழுதில் அடைந்தனர், ஆல் - அசை. குரவமலரணிந்த, குவிந்த கோங்கு போன்ற முலைகளை உடைய சீதை எனலுமாம். மரவம் என்பதுவெண்கடம்பு எனவும் குங்குமமரம் எனவும் கொள்வர். சரவங்கன் - சரபங்கன் எதுகை நோக்கித்திரிந்தது. இரவு அங்கு அணுகும் பொழுது எனவும் பிரிப்பர். குரவம் கோங்கு என்பன முதலாகு பெயர்கள். கொம்பு - உவமவாகுபெயர். இது முதல் கலிவிருத்தம். மூச்சீரடி வஞ்சி விருத்தமாகவும்கொள்வர். 1 2588. | செவ் வேலவர் சென்றனர்; சேறல் உறும் அவ் வேலையின் எய்தினன்- ஆயிரமாம், தவ்வாது இரவும் பொலி தாமரையின் வெவ்வேறு அலர், கண்ணினன், விண்ணவர் கோன். |
செவ்வேலவர் சென்றனர் - சிவந்த வேலினைக் கொண்ட இராமலக்குவர் அவ்வழியே போயினர்; சேறல் உறும் அவ்வேலையின்- சென்று அடையும் அப்பொழுதில்; தவ்வாது இரவும் பொலி தாமரையின்- கூம்பாமல்இரவிலும் மலர்ந்துள்ள தாமரை மலர்கள் போல; வெவ்வேறு அலர் ஆயிரமாம் கண்ணினன் - தனித்தனியே மலர்ந்து விளங்கும் ஆயிரம் கண்களை உடையவனாம்; விண்ணவர் கோன் எய்தினன்- தேவர் தலைவனாம் இந்திரன் அங்கு வந்து சேர்ந்தான். செவ்வேல் - சிறந்த வேலுமாம். வேல் என்பது போர்க் கருவிகளுக்குப் பொது. வேலை -வேளை. இந்திரன் கண்கள் இமையாமல் இருப்பதால் இரவும் பொலி தாமரை உவமையாயிற்று. இதுஇல்பொருளுவமை - வெவ்வேறு அலர் கண் என்பது இந்திரனுக்குக் கௌதமமுனி் சாபத்தால் உடலெங்கும்கண் பெற்றதைக் குறிக்கும். (472). தவ்வாது - தவறாமல் என்றும்உரைப்பர். 2 2589. | அன்னச் செலவின், படிமேல், அயல் சூழ் பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளிமேல் மின்னின் செறி கற்றை விரிந்தன போல், பின்னிச் சுடரும், பிறழ், பேர் ஒளியான் |
|