பக்கம் எண் :

430ஆரணிய காண்டம்

சீலத்தால் அவிப்பது அன்றி,
     செய்யத்தான் ஆவது உண்டோ?

    கூலத்து ஆர் உலகம் எல்லாம் - கடலால் சூழப்பெற்ற உலகம்
முழுவதும்; குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க - குளிர்ச்சியும் வெப்பமும்
இல்லாமற் போன நிலையிலும்; நீலத்தார் அரக்கன் மேனி - நீல நிறம்
பொருந்திய இராக்கதனாகிய இராவணனின் உடல்; நெய்யின்றி எரிந்தது -
எண்ணெயின்றியே எரியலாயிற்று; காலத்தால் வருவது ஒன்றோ? -
இவ்வெம்மைக்குக் காலம் (பருவம்) காரணமென்று கூறமுடியுமோ?;
காமத்தால் கனலும் வெந்தீ - காமநோயால் எரியும் கொடு நெருப்பை;
சீலத்தால் அவிப்பது அன்றி - நல்லொழுக்கத்தால் அணைக்கலாமே
அன்றி; செய்யத் தான் ஆவது உண்டோ? - வேறு மாற்று ஏதேனும்
செய்தல் இயலுவதோ? (இயலாது). அன்றே - அசை.

     நெய்யின்றி நெருப்பு எரிந்தது என்றது காரணமின்றியே காரியம்
நிகழ்வதாகக் காட்டுவதால் விபாவனை அணி.                      104

இராவணன் சந்திரனைக் கொணருமாறு கூறுதல்

3171. நாரம் உண்டு எழுந்த மேகம்,
     தாமரை வளையம், நானச்
சாரம் உண்டு இருந்த சீதச் சந்தனம்,
     தளிர், மென் தாதோடு,
ஆரம், உண்டு எரிந்த சிந்தை
     அயர்கின்றான்; அயல் நின்றாரை,
'ஈரம் உண்டு என்பர் ஓடி, இந்துவைக்
     கொணர்மின்' என்றான்.

    நாரம் உண்டு எழுந்த மேகம் - நீரை அருந்தி எழுந்த முகில்களும்;
தாமரை வளையம் - தாமரை மாலைகளும்; நானச் சாரம் உண்டு
இருந்த-
கஸ்தூரியின் சாரம் கலந்திருக்கின்ற; சீதச் சந்தனம் - குளிர்ந்த
சந்தனமும்; தளிர் - தளிர்களும்; மென்தாதோடு - மென்மையான
மகரந்தமும்; ஆரம் - குளிர்ந்த முத்துக்களும்; உண்டு - மேனியில்
பூசப்பெற்றும்; எரிந்த சிந்தை அயர்கின்றான் - வெப்ப மிகுதியால் மனம்
தளர்கின்ற இராவணன்; அயல் நின்றாரை - அருகில் நின்ற பணியாளரை
நோக்கி; 'ஈரம் உண்டு என்பர் - நிலாவுக்குக் குளிர்ச்சி உண்டு
என்கிறார்கள்; ஓடி - நீங்கள் விரைந்தோடி; இந்துவைக் கொணர்மின் -
சந்திரனைக் கொண்டு வாருங்கள்'; என்றான் - எனக் கட்டளையிட்டான்.

     பருவ காலங்கள் அகன்ற பின் குளிர்ந்த பொருள்கள் எவையும்
பயன்படாமல் போகச் சந்திரனைக் கொண்டு வர இராவணன்
உத்தரவிட்டான்.                                              105