புருவங்களையும் சிவந்த கண்களையும் உடைய இராக்கதனாகிய இராவணனுக்கு; நெருப்பின் நாப்பண் - நெருப்பின் நடுவே (வைக்கப்பட்டதால்); உருகிய வெள்ளி - கொதித்த வெள்ளிக் குழம்பை; அள்ளி வீசினால் ஒத்தது - கைகளால் வாரி வீசினாற் போன்றிருந்தது. (அன்றே - அசை). பாற்கடலில் தோன்றிய சந்திரன் அக்கடலிலிருந்தும் தோன்றிய அமுதத்தைப் பருகி நிலவொளியாக வெளியிடுவதாகக் கூறுதல் தற்குறிப்பேற்ற அணி. 109 3176. | மின் நிலம் திரிந்தது அன்ன விழுநிலா-மிதிலை சூழ்ந்த செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா, நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை, நாளும் தோலாத் துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் எனச்சுட்டது அன்றே. |
மின் நிலம் திரிந்தது அன்ன - மின்னல் ஒன்று நிலத்தில் உலாவியது போன்ற; விழுநிலா - சிறந்த சந்திர கிரணமானது; மிதிலை சூழ்ந்த - மிதிலை நகரத்தைச் சூழ்ந்த; செந்நெல் அம் கழனி நாடன் - செந்நெல் வயல்களை உடைய விதேக நாட்டு அரசனான சனகனது; திரு மகள் - செல்வ மகளான சீதையின்; செவ்வி - வடிவப் பொலிவை; கேளா - (தங்கை வாயிலாகக்) கேட்டறிந்து; நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை - (அதனால்) தன் இனிய நலம், சிறப்பு ஆகியனவற்றை இழந்து தவிக்கும் இராக்கதனாம் இராவணனை; நாளும் தோலா - எந்நாளும் தோல்வியுறாத; துன்னலன் ஒருவன் - பகைவன் ஒருவன்; பெற்ற - அடைந்த; புகழ் எனச் சுட்டது - புகழாகிய பெருமை மனதைச் சுடுவது போன்று துன்பம் தந்தது. அன்றே - ஈற்றசை. இப்பாடலில் அமைந்திருப்பது உவமையணி. 110 3177. | கருங் கழல் காலன் அஞ்சும் காவலன், கறுத்து நோக்கி, 'தரும் கதிர்ச் சீத யாக்கைச் சந்திரன்-தருதிர் என்ன, முருங்கிய கனலின், மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து, அருங் கதிர் அருக்கன்தன்னை ஆர் அழைத்தீர்கள்?' என்றான். |
|