பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 433

புருவங்களையும் சிவந்த கண்களையும் உடைய இராக்கதனாகிய
இராவணனுக்கு; நெருப்பின் நாப்பண் - நெருப்பின் நடுவே
(வைக்கப்பட்டதால்); உருகிய வெள்ளி - கொதித்த வெள்ளிக் குழம்பை;
அள்ளி வீசினால் ஒத்தது - கைகளால் வாரி வீசினாற் போன்றிருந்தது.
(அன்றே - அசை).

     பாற்கடலில் தோன்றிய சந்திரன் அக்கடலிலிருந்தும் தோன்றிய
அமுதத்தைப் பருகி நிலவொளியாக வெளியிடுவதாகக் கூறுதல்
தற்குறிப்பேற்ற அணி.                                         109

3176.மின் நிலம் திரிந்தது அன்ன
     விழுநிலா-மிதிலை சூழ்ந்த
செந்நெல் அம் கழனி நாடன் திரு
     மகள் செவ்வி கேளா,
நல் நலம் தொலைந்து சோரும்
     அரக்கனை, நாளும் தோலாத்
துன்னலன் ஒருவன் பெற்ற
     புகழ் எனச்சுட்டது அன்றே.

    மின் நிலம் திரிந்தது அன்ன - மின்னல் ஒன்று நிலத்தில்
உலாவியது போன்ற; விழுநிலா - சிறந்த சந்திர கிரணமானது; மிதிலை
சூழ்ந்த -
மிதிலை நகரத்தைச் சூழ்ந்த; செந்நெல் அம் கழனி நாடன் -
செந்நெல் வயல்களை உடைய விதேக நாட்டு அரசனான சனகனது; திரு
மகள் -
செல்வ மகளான சீதையின்; செவ்வி - வடிவப் பொலிவை; கேளா
-
(தங்கை வாயிலாகக்) கேட்டறிந்து; நல் நலம் தொலைந்து சோரும்
அரக்கனை -
(அதனால்) தன் இனிய நலம், சிறப்பு ஆகியனவற்றை
இழந்து தவிக்கும் இராக்கதனாம் இராவணனை; நாளும் தோலா -
எந்நாளும் தோல்வியுறாத; துன்னலன் ஒருவன் - பகைவன் ஒருவன்;
பெற்ற - அடைந்த; புகழ் எனச் சுட்டது - புகழாகிய பெருமை மனதைச்
சுடுவது போன்று துன்பம் தந்தது. அன்றே - ஈற்றசை.

     இப்பாடலில் அமைந்திருப்பது உவமையணி.                   110

3177.கருங் கழல் காலன் அஞ்சும்
     காவலன், கறுத்து நோக்கி,
'தரும் கதிர்ச் சீத யாக்கைச்
     சந்திரன்-தருதிர் என்ன,
முருங்கிய கனலின், மூரி விடத்தினை
     முருக்கும் சீற்றத்து,
அருங் கதிர் அருக்கன்தன்னை ஆர்
     அழைத்தீர்கள்?' என்றான்.