பக்கம் எண் :

434ஆரணிய காண்டம்

    கருங்கழல் காலன் - பெரிய வீரக் கழலை அணிந்த இயமனும்;
அஞ்சும் காவலன் - அஞ்சுகின்ற பெருமை படைத்த இராவணன் -
கறுத்து நோக்கி - (தன் பணியாளரைச்) சினந்து நோக்கி; சீதம் தரும்
கதிர் -
குளிர்ச்சியைத் தரும் கிரணங்கள் கொண்ட; யாக்கைச் சந்திரன் -
மேனி படைத்த சந்திரனை; தருதிர் என்ன - அழைத்து வாருங்கள் என்று
(யான்) கூற; முருங்கிய கனலின் - அழிக்கும் கொடு நெருப்பையும்; மூரி
விடத்தினை -
வலிமை மிக்க நஞ்சினையும்; முருக்கும் சீற்றத்து - கடும்
கோபத்தையும்; அருங்கதிர் அருக்கன் தன்னை - (கொண்ட) வெப்பக்
கிரணங்களையும் கொண்ட சூரியனை; 'ஆர் அழைத்தீர்கள்' என்றான் -
அழைத்து வந்தது யார் என்று கேட்டான்.

     குளிர் நிலவைக் கடுங்கதிராய் உணர்ந்தான்.                  111

3178. அவ் வழி, சிலதர் அஞ்சி, 'ஆதியாய்!
     அருள் இல்லாரை
இவ் வழித் தருதும் என்பது இயம்பல்
     ஆம் இயல்பிற்று அன்றால்;
செவ் வழிக் கதிரோன் என்றும்
     தேரின்மேல் அன்றி வாரான்;
வெவ் வழித்து எனினும், திங்கள்,
     விமானத்தின் மேலது' என்றார்.

    அவ்வழிச் சிலதர் அஞ்சி - இராவணன் இவ்வாறு வினவிய போது
பணியாளர் அச்சம் கொண்டு; ஆதியாய் - முதல்வனே; அருள் இல்லாரை-
உன்னால் அருளப்பட்டாரையன்றிப் பிறரை; இவ் வழித் தருதும் என்பது-
இங்கு யாம் அழைத்து வருதல் என்பது; இயம்பலாம் இயல்பிற்று
அன்று -
பேசத் தக்க தன்மையது அன்று; செவ்வழிக் கதிரோன் -
சிவந்த கிரணங்கள் உடைய சூரியன்; என்றும் தேரின் மேல் அன்றி
வாரான் -
எப்போதும் தேர் மீதன்றி வரமாட்டான்; வெவ்வழித்து
எனினும் -
(உனக்கு) வெப்பம் தருவதாய் இருப்பினும்; திங்கள் - சந்திரன்;
விமானத்தின் மேலது என்றார் - விமானத்தின் மீதில் உள்ளான் என்றனர்;
ஆல் - அசை.

     கதிரவனும் திங்களும் பயணம் செய்யும் முறைமை எடுத்துக்
காட்டினார்.                                                  112

இராவணன் நிலாவைப் பழித்தல்

3179. பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு
     அன்புபட்டார் படும் காமக்
குணம்தான் முன்னம் அறியாதான்
     கொதியாநின்றான்; மதியாலே,