பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 435

தண் அம் தாமரையின் தனிப் பகைஞன்
     என்னும் தன்மை, ஒருதானே
உணர்ந்தான்; உணர்வுற்று, அவன்மேல் இட்டு,
     உயிர்தந்து உய்க்க உரைசெய்வான்;

    பணம் - பாம்பின் படம்; தாழ் - தோற்கும்படியான; அல்குல் -
அல்குலையும்; பனி மொழியார்க்கு - குளிர்ச்சி பொருந்திய பேச்சையும்
உடைய பெண்களிடம்; அன்புபட்டார் - ஆசை கொண்டார்; படும் -
அடைகின்ற; காமக் குணம் - காதல் நோயின் தன்மையை; தான் முன்னம்
அறியாதான் -
முன் எப்போதும் துய்த்தறியாத இராவணன்; மதியாலே
கொதியா நின்றான் -
சந்திரனால் துன்பம் கொண்டவனாகி; தண் அம்
தாமரையின் -
குளிர்ந்த அழகிய தாமரைக்கு; தனிப் பகைஞன் என்னும்
தன்மை -
(இந்தச் சந்திரனே) நேரான எதிரி என்னும் உண்மையை; ஒரு
தானே உணர்ந்தான் -
தனக்குத் தானே உணர்ந்து கொண்டான்;
உணர்வுற்று - இவ்வுண்மை உணர்வு வந்து எய்தியதும்; அவன் மேல்
இட்டு -
அச் சந்திரன் மேல் வைத்து; உயிர் தந்து உய்க்க - தன் உயிரை
அளித்துக் காக்குமாறு; உரை செய்வான் - கூறத் தொடங்கினான்.

     இதுகாறும் தான் விரும்பிய மகளிரை அடைதலல்லாது நினைந்து
வருந்தும் அனுபவம் இராவணனுக்கு ஏற்படவில்லை என்பதாம்.     113

3180.'தேயாநின்றாய்; மெய் வெளுத்தாய்;
     உள்ளம் கறுத்தாய்; நிலை திரிந்து
காயா நின்றாய்; ஒரு நீயும்,
     கண்டார் சொல்லக் கேட்டாயோ?
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார்
     இன்மையால்
ஓயாநின்றேன்; உயிர் காத்தற்கு
     உரியார் யாவர்?-உடுபதியே!

    உடுபதியே - விண்மீன்களின் தலைவனே!; தேயா நின்றாய் - (நீ,
உன்) உடல் தேயப் பெற்றாய்; மெய் வெளுத்தாய் - மேனி
வெண்ணிறமுற்றாய்; உள்ளம் கறுத்தாய் - உள்ளிடத்தே கறுத்தும்
விளங்குகின்றாய்; நிலை திரிந்து காயா நின்றாய் - குளிர்ச்சி நிலை மாறி
வெப்பமும் தருகின்றாய்; ஒரு நீயும் - உயர்ந்தவனாகிய நீயும்; கண்டார்
சொல்லக் கேட்டாயோ -
(என்னைப் போன்றே) சீதையின் அழகைக்
கண்டவர்கள் வருணிக்கக் கேட்டனையோ? பாயா நின்ற மலர் வாளி -
(என் உடல் மீது) பாய்கின்ற மன்மதனின் மலர்க் கணைகள்; பறியா
நின்றார் இன்மையால் -
பறித்து என்னைப் பாதுகாப்பார்
இல்லாமையினால்; ஓயா நின்றேன் - தளர்வுற்று நின்றேன்; உயிர்
காத்தற்கு -