சந்திரன் சற்றே ஒளி வீசி இராவணன் ஆணையால் உடன் மறைந்ததால் குவளைப் பூக்கள் சிறிது காலம் செல்வம் பெற்று இழந்த சிறியோர் போன்றன என்றார். சேதாம்பல் - பண்புத்தொகை. 117 3184. | நாணிநின்று ஒளி மழுங்கி, நடுங்காநின்ற உடம்பினன் ஆய், சேணில்நின்று புறம் சாய்ந்து, கங்குல்-தாரம் பின்செல்ல, பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுதப் போவான், புகழ் வேந்தர் ஆணை செல்ல, நிலை அழிந்த அரசர் போன்றான்-அல் ஆண்டான். |
பூணின் வெய்யோன் - உலகுக்கு அணியான கதிரவன் ஒரு திசையே புகுத - ஒரு வழியில் வந்து புகவும்; அல் ஆண்டான் - இரவின் ஆட்சித் தலைவனாகிய சந்திரன்; நாணி நின்று - வெட்கமுற்று; ஒளி மழுங்கி - ஒளி குன்றியவனாய்; நடுங்கா நின்ற உடம்பினன் ஆய் - நடுக்கம் மேவிய உடலோடு; சேணில் நின்று - தொலை தூரம் அகன்று; புறம் சாய்ந்து - முதுகுகாட்டிச் சென்று; கங்குல் தாரம் பின் செல்ல - இரவாகிய மனைவி உடன் செல்ல; போவான் - நீங்கிச் சென்றான்; புகழ் வேந்தர் - பெருமை மிக்க பேரரசர்; ஆணை செல்ல - கட்டளை பிறப்பிக்க; நிலை அழிந்த - தம் நிலை தடுமாறிய; அரசர் போன்றான் - சிற்றரசர் போலக் காட்சி தந்தான். அகலும் சந்திரன் தோல்வியுற்ற அரசர் போன்றிருந்தான். உவமை அணி. அல்லாண்டான் - இரவின் நாயகன். 118 கலிவிருத்தம் 3185. | மணந்த பேர் அன்பரை, மலரின் சேக்கையுள், புணர்ந்தவர், இடை ஒரு வெகுளி பொங்கலால், கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று உணர்ந்திலர்; கனவினும் ஊடல் தீர்ந்திலர். |
கணம் குழை மகளிர்கள் - பலவகைக் காதணிகளும் பூண்ட அரக்க மகளிர்; மலரின் சேக்கையுள் - மலர்ப் படுக்கையில்; மணந்த பேர் |