அன்பரை - தம்மை மணந்த கணவர் தம்மை; புணர்ந்தவர் - அணைத்து மகிழ்ந்தவர்; இடை ஒரு வெகுளி பொங்கலால் - கூடலிடையே தம் கணவர்பால் கொண்ட ஊடலின் சினம் மீதூர்தலால்; கங்குல் வீந்தது - இரவு முடிந்து போய் விட்டது; என்று உணர்ந்திலர் - என அறியாமற் போயினர்; கனவினும் - உறக்கத்தில் எழும் கனவிலும்; ஊடல் தீர்ந்திலர்- தம் ஊடல் நீங்காதவராய் விளங்கினர். விரைவில் நீங்கும் இரவென உணராமல் ஊடற்கோபம் தொடர உறங்கினர் அரக்க மகளிர். 119 3186. | தள்ளுறும் உயிரினர், தலைவர் நீங்கலால், நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர்- கொள்ளையின் அலர் கருங் குவளை நாள்மலர் கள் உகுவன என, கலுழும் கண்ணினார். |
நள் இரவிடை - நடு இராத்திரியெனக் கருதத்தக்க வேளையில்; தலைவர் நீங்கலால் - (விடிந்து போனதால்) தங்கள் கணவர் பிரிந்து சென்றமையினால்; தள்ளுறும் உயிரினர் - உடல் விட்டு நீங்கும் உயிரென்ற தன்மை உடையராய்; உறும் நடுக்கம் நீங்கலர் - மெய்யில் ஏற்பட்ட நடுங்குதல் நீங்காதவராய் (அரக்க மகளிர் சிலர்); கொள்ளையின் அலர் - மிகுதியாகச் செழித்து மலர்ந்த; கருங்குவளை நாள் மலர் - புதிய கருங்குவளை மலர்கள்; கள் உகுவன என - தேன் சிந்துவன போன்று; கலுழும் கண்ணினார் - கண்ணீர் பொழியும் கண்களை உடையார் ஆயினர். இரவு நீங்கியதால் ஏற்பட்ட விசித்திர நிகழ்ச்சிகளில் ஒன்றாக இதனைக் கூறினார். 120 3187. | அணைமலர்ச் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர், பணைகளைத் தழுவிய பவள வல்லிபோல், இணை மலர்க் கைகளின் இறுக, இன் உயிர்த் துணைவரைத் தழுவினர், துயில்கின்றார் சிலர். |
சிலர் - மேலும் சில அரக்க மகளிர்; அணைமலர்ச் சேக்கையுள் - பஞ்சு மெத்தை மேல் மலர் தூவிய படுக்கையில்; ஆடல் தீர்ந்தனர் - |