படிமேல் - தரை மீது; அயல் சூழ் - அருகிலுள்ள இடங்களில் சுற்றிலுமுள்ள;அன்னச் செலவின் - அன்னம் போன்ற நடையுடைய; பொன்னின் பொலிவார் அணிபூண்ஒளிமேல் - திருமகள் போல் விளங்கும் தெய்வப் பெண்கள் அணிந்த நகைகளின் ஒளியின்மேல்; மின்னல் செறி கற்றை விரிந்தன போல் - மின்னல்களின் மிகுந்த கூட்டம்பரவியது போல்; பின்னிச் சுடரும் - கலந்து விளங்கும்; பிறழ் பேர் ஒளியான் -மிகுந்த சிறந்த ஒளி உடையவன் (இந்திரன்). செலவு - நடை, பொன் - தேமலுமாம். மின்னலின் செறி கற்றை என்பது தெய்வப் பெண்களின்கூட்டத்திற்கு உவமை. இந்திரன் கருநிற முடையவன். ஆதலால் அவனை மேகத்திற்கு உள்ளுறையாகக் கொள்ளலுமாம். (2597) 3 2590. | வானில் பொலி தோகையர் கண்மலர் வண் கானில் படர் கண்-களி வண்டொடு, தார் மேனித் திரு நாரதன் வீணை இசைத் தேனில் படியும் செவி வண்டு உடையான் |
வானில் பொலி தோகையர் - தேவர் உலகில் விளங்கும் மயில் போன்ற தேவ மகளிரின்; கண்மலர் வண்கானில் - கண்களாம் வளப்பமுடைய பூக்கள் பூத்த காட்டில்; படர் கண்களி வண்டொடு - படர்ந்துசெல்லும் தன் கண்களாம் மயக்கமுற்ற வண்டுகளோடு; தார் மேனித் திரு நாரதன் - மாலைஅணிந்த திருமேனியும் திருவினையுமுடைய நாரதமுனிவன்; வீணை இசைத் தேனில் - மகதி எனும்வீணையில் எழும் இசையாகிய தேனிடத்து; படியும் செவி வண்டு உடையான் - தோயும் செவிகளாம் வண்டுகளை உடையவனாம் இந்திரன். வண்டுகள் மலர் வனத்தில் மொய்ப்பது போல் தெய்வ மகளிரைத் தன் ஆயிரம் கண்களால்கண்டுகளித்தும், வண்டு தேன் பருகி இன்புறல் போல் நாரத வீணை இசையினைக் கேட்டு மகிழ்ந்தும்இருந்தனன் இந்திரன் - இது உருவக அணி. கண்வண்டோடு செவி வண்டும் உடையவனாம். நாரதர் எனின் ஆன்ம ஞானம் அளிப்பவன், நரர்களுக்குள்ள ஒற்றுமையைப் பிளப்பவன், அன்பை அருள்பவன் என்றும்பொருள். 4 2591. | அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும், நூல் வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா |
|