பக்கம் எண் :

440ஆரணிய காண்டம்

கலவி முற்றியவராய்; பணைகளைத் தழுவிய - பருத்த மரங்களைப்
பின்னிய; பவளவல்லி போல் - பவளக் கொடிகளைப் போல; இன் உயிர்த்
துணைவரை -
இனிய உயிரனைய கணவர்களை; இணை மலர்க்
கைகளின் -
மலர் போன்ற இரண்டு கரங்களாலும்; இறுகத் தழுவினர் -
அழுத்தமாக அணைத்தவாறு; துயில்கின்றார் - உறங்கினர்.

     உயிர்த் துணைவர் - உவமத் தொகை (உயிர் போன்ற துணைவர்).
ஆடவரின் திண்மைக்கு மரங்களும், பெண்டிரின் எழிலுக்கும் மென்மைக்கும்
பவளக் கொடிகளும் பொருந்திய உவமைகளாயின.     121

3188.அளிஇனம் கடம்தொறும்
     ஆர்ப்ப, ஆய் கதிர்
ஒளி பட உணர்ந்தில,
     உறங்குகின்றன;
தெளிவுஇல இன் துயில்
     விளையும் சேக்கையுள்
களிகளை நிகர்த்தன, களி
     நல் யானையே.

    அளி இனம் - வண்டுகளின் கூட்டம்; கடம் தொறும் ஆர்ப்ப -
கன்னங்களில் பொழியும் மதநீரில் மொய்த்து ஆரவாரிக்கவும்; ஆய் கதிர்
ஒளிபட -
வெளிச்சத்தால் சிறந்த சூரிய ஒளி பாயவும்; உணர்ந்தில
உறங்குகின்றன -
விழிப்புறாமல் உறங்குகின்றனவான; களி நல் யானை -
மதங்கொண்ட உயர்ந்த யானைகள்; இன்துயில் விளையும் சேக்கையுள் -
இனிய உறக்கம் தரும் படுக்கையில்; தெளிவு இல - தூக்கம் தெளியாமல்
உறங்கும்; களிகளை நிகர்த்தன - கட்குடியர்களைப் போல விளங்கின;
ஏ-
ஈற்றசை.

     திடீரென விடிந்தமையின் விளைவாய் யானைகளும்துயிலெழாதிருந்தன.
களி(ப்பு)கள் உண்பதால் வரும் போதை.கட்குடியர்களை உயர்திணையாகக்
கருதுதலும் பொருந்தாது என்பார் போல்களிகள் என அஃறிணையில்
சுட்டினார்.                                                   122

3189.விரிந்து உறை துறைதொறும்
     விளக்கம் யாவையும்,
எரிந்து இழுது அஃகல,
     ஒளி இழந்தன-
அருந் துறை நிரம்பிய
     உயிரின் அன்பரைப்
பிரிந்து உறைதரும்
     குலப் பேதைமாரினே.