பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 443

மாண் வினைப் பயன்படா
     மாந்தர் வாயில் சேர்
பாணரின் தளர்ந்தன-
     பாடல்-தும்பியே.

    நாள் மதிக்கு அல்லது - ஒவ்வொரு நாளும் உதிக்கும் நிலாவுக்கு
அன்றி; நடுவண் எய்திய ஆணையின் - இடையில் வந்து சேரும்
(பகலவனின்) கட்டளைக்கு; திறக்கலா - மலராத; அலரில் பாய்வன -
குவளை போன்ற மலர்களில் பாய்வனவான; பாடல் தும்பி - இசை பாடும்
வண்டுகள் (அவை குவிந்துள்ள நிலையில்); மாண்வினைப் பயன்படா -
மாட்சி மிக்க கலைத் தொழிலைப் பயன் கொள்ளாத; மாந்தர் வாயில்
சேர்-
மனிதர்களின் வீட்டு வாசலை அடைந்து; பாணரின் தளர்ந்தன -
(பயன்பெறாத) பாணர்களைப் போல் சோர்வுற்றன; ஏ - ஈற்றசை.

     பகற் பொழுதில் குவிந்த மலர்களில் பாய்ந்த வண்டுகள்
கலைநயமுணராதார் முன் சென்ற பாணர் போன்று சோர்வுற்றன.     127

3194.அரு மணிச் சாளரம்
     அதனினூடு புக்கு
எரி கதிர் இன் துயில்
     எழுப்ப எய்தவும்,
மருளொடு தெருளுறும்
     நிலையர், மங்கையர்-
தெருளுற மெய்ப்
     பொருள் தெரிந்திலாரினே.

    அரு மணிச் சாளரம் - அரிய மாணிக்கங்கள் பதித்த சன்னலில்;
அதனின் ஊடு புக்கு - அங்கே உட்புகுந்து வந்து; எரிகதிர் - வெப்பம்
மிக்க சூரியன்; இன்துயில் எழுப்ப எய்தவும் - தங்கள் இனிய
உறக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வந்து சேர்ந்த பின்னும்; மங்கையர் -
அரக்கர் குலப் பெண்கள்; தெருள் உற மெய்ப் பொருள் தெரிந்திலாரின்
-
தெளிவு தரும்படி உயர்ந்த உண்மைப் பொருளை அறியாத பேதையர்
போன்று; மருளொடு - மயக்கமும்; தெருளுறும் நிலையர் - தெளிவும்
கலந்த குழப்ப நிலையினராக விளங்கினர்; ஏ - ஈற்றசை.

     இரவு சென்றதை நம்பமுடியாத நிலையால் ஏற்பட்ட குழப்பம்,
ஞானமில்லாதார் உலக வாழ்வின் உண்மையறியாத குழப்பத்தோடு
ஒப்பிடப்படுகின்றது.                                           128

3195. ஏவலின் வன்மையை
     எண்ணல் தேற்றலர்,