| | நாவலர் இயற்றிய நாழி நாம நூல் காவலின் நுனித்து உணர் கணிக மாக்களும், கூவுறு கோழியும், துயில்வு கொண்டவே. |
நாவலர் இயற்றிய - புலமை நலம் சான்றோர் உருவாக்கிய; நாழி நாம நூல் - காலக் கணிதமான சோதிட நூல்களை; காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் - பாதுகாத்து ஆராய்ந்து உணர்ந்த சோதிட வல்லுநர்களும்; கூவுறு கோழியும் - விடியலைக் கூவி உணர்த்தும் சேவல்களும்; ஏவலின் வன்மையை - (இரவை விலக்கிப் பகலை வரச் சொன்ன) இராவணனின் ஆணையின் வல்லமையை; எண்ணல் தேற்றலர் - உணரும் ஆற்றல் இல்லாதவராய்; துயில்வு கொண்ட - உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். (ஏ - அசை). இராவணன் ஆணையின் கடுமையால் காலக் கணிதமும் தோற்றது. இயற்கையை உணர்ந்த சேவல்களும் தோற்றன. எழுவாய்க்கு ஏற்றபடி அஃறிணை முடிவு உயர்திணையாகப் பொருள் முடிவு பெற்றது. 129 | 3196. | இனையன உலகினில் நிகழும் எல்லையில், கனை கழல் அரக்கனும், கண்ணின் நோக்கினான்; 'நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால்; அனைய அத் திங்களே ஆகுமால்' என்றான். |
இனையன - இத்தகைய நிகழ்ச்சிகள்; உலகினில் நிகழும் எல்லையில் - உலகெங்கும் நடைபெற்ற பொழுதில்; கனை கழல் அரக்கனும் - ஒலிக்கும் வீரக்கழல் புனைந்த இராவணனும்; கண்ணின் நோக்கினான் - கண்களால் சூரியனைக் கண்டு; நினைவுறு மனத்தையும்- எண்ணும் இதயத்தையும்; நெருப்பின் தீய்க்குமால் - இச் சூரியன் தீயாய்ச் சுட்டெரிக்கின்றான்; ஆதலால்; அனைய அத்திங்களே ஆகும் - இவனும் அச் சந்திரன் போன்றே இருக்கிறான்'; என்றான் - என்று மொழிந்தான். (ஆல் - அசை). 130 | 3197. | 'திங்களோ அன்று இது; செல்வ! செங் கதிர் |
|