| | பொங்கு உளைப் பச்சை அம் புரவித் தேரதால்; வெங் கதிர் சுடுவதே அன்றி, மெய் உறத் தங்கு தண் கதிர் சுடத் தகாது, என்றார் சிலர். |
சிலர் - (இராவணன் இவ்வாறு கூறக்கேட்ட) சில பேர்; 'செல்வ - திரு மிக்கவனே; இது திங்களோ அன்று - இது சந்திரன் அல்ல; செங்கதிர் - சிவந்த கதிரவனே; பொங்கு உளை - வளர்ந்த பிடரி மயிரை உடைய; பச்சை அம் புரவித் தேர் அது - பச்சை நிறமான அழகிய குதிரைகள் பூட்டிய தேர் அது; வெங்கதிர் சுடுவதே அன்றி - வெப்பம் மிக்க சூரியன் சுடுதல் இயல்புடையதே அல்லாமல்; மெய் உறத் தங்கு தண்கதிர் - உடலில் பட்டுக் குளிர்ச்சி தரும் சந்திரன்; சுடத் தகாது - வெப்பம் ஊட்டுவது அன்று'; என்றார் - என விளக்கம் கூறினர்; ஆல் - அசை. சூரியன் குதிரைகள் பசுமை நிறம் கொண்டனவாகக் கூறுதல் புராண மரபு. 131 கலிநிலைத் துறை இரவியை நீக்கி இளம் பிறை வருக எனல் | 3198. | 'நீலச் சிகரக் கிரி அன்னவன், 'நின்ற வெய்யோன், ஆலத்தினும் வெய்யன்; அகற்றி, அரற்றுகின்ற வேலைக் குரலைத் "தவிர்க" என்று விலக்கி, மேலை மாலைப் பிறைப் பிள்ளையைக் கூவுதிர் வல்லை' என்றான். |
நீலச் சிகரக் கிரி அன்னவன் - சிகரங்கள் ஓங்கிய நீல மலை போன்ற இராவணன்; 'நின்ற வெய்யோன் - இப்போது நிற்கும் கதிரவன்; ஆலத்தினும் வெய்யன் - நஞ்சினும் கொடியவன்; அகற்றி - அவனை நீக்கி விட்டு; அரற்றுகின்ற வேலைக் குரலை - பேரொலி எழுப்பும் கடலின் ஓசையையும்; தவிர்க என்று விலக்கி - நீங்குக என்று விலக ஆணையிட்டு; மேலை - முன்பு வந்த; மாலைப் பிறைப் பிள்ளையை - மாலைப் பொழுதின் இளம்பிறையை; வல்லை - விரைவாக; கூவுதிர் - அழையுங்கள்'; என்றான் - எனப்(பணியாளருக்கு) உத்தரவிட்டான். |