பக்கம் எண் :

446ஆரணிய காண்டம்

     மீண்டும் நிலவைக் கொணர ஆணையிட்டான். இளம்பிறையைப்
பிறைப் பிள்ளை என்று படிமச் சிறப்புறக் குறித்த நயம் உணர்க.     132

3199.சொன்னான் நிருதர்க்கு இறை;
     அம் மொழி சொல்லலோடும்;
அந் நாளில் நிரம்பிய அம் மதி,
     ஆண்டு ஓர் வேலை
முந் நாளின் இளம் பிறை
     ஆகி முளைத்ததுஎன்றால்,
எந் நாளும் அருந் தவம் அன்றி,
     இயற்றல் ஆமோ?

    நிருதர்க்கு இறை - அரக்கரின் தலைவனாகிய இராவணன்;
சொன்னான் - மேற் கூறியவாறு கட்டளையிட்டான்; அம்மொழி
சொல்லலோடும் -
அக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதும்; அந்நாளில்
நிரம்பிய அம்மதி -
அன்று முழுநிலவாய்த் திகழ்ந்த அச் சந்திரன்;
ஆண்டு - அவ்விடத்தில்; ஓர் வேலை - ஒரு புறத்தில்; முந்நாளின் -
மூன்றாம் நாளின்; இளம்பிறை ஆகி - கீற்று நிலவாக; முளைத்தது
என்றால் -
உதித்தது எனில்; எந்நாளும் - எக்காலத்திலும்; அருந்தவம்
அன்றி -
அரிய நற்றவம் செய்திருந்தால் அல்லாமல்; இயற்றல் ஆமோ?-
இத்தகு அருஞ்செயல் நிகழ்த்துவது சாத்தியம் ஆகுமா? (ஆகாது).

     முந்நாள் இளம்பிறை - மூன்றாம் பிறைச்சந்திரன். 'வேண்டிய வேண்டி
யாங்கு எய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் படும்' (திருக்குறள் 265)
என்னும் கருத்து ஒப்பிடத்தக்கது.                                133

பிறையைப் பழித்தல்

3200.குடபாலின் முளைத்தது கண்ட
     குணங்கள்-தீயோன்,
'வடவா அனல்; அன்று எனின்,
     மண் பிடர் வைத்த பாம்பின்
விடவாள் எயிறு; அன்று எனின்,
     என்னை வெகுண்டு, மாலை
அட, வாள் உருவிக்கொடு
     தோன்றியது ஆகும் அன்றே.

    குடபாலின் முளைத்தது கண்ட - மேற்குத் திசையில் இளம்பிறை
தோன்றியதைக் கண்ட; குணங்கள் தீயோன் - தீய பண்புகளை உடைய
இராவணன்; (இது); வடவா அனல் - வடவைத் தீயே ஆகும்; அன்று
எனின் -
இல்லையெனில்; மண்பிடர் வைத்த பாம்பின் - பூமியைத்
தலையில்