ஏந்திய ஆதிசேடனின்; விடவாள் எயிறு - நஞ்சு தோய்ந்த கூரிய பல் ஆகும்; அன்று எனின் - இல்லையெனில்; மாலை - மாலைப் பொழுது; என்னை வெகுண்டு - என் மீது சினம் கொண்டு; அட - கொல்லுதற்காக; வாள் உருவிக் கொடு - வாளை உருவிக் கொண்டு; தோன்றியது ஆகும்- எதிரில் காட்சி தருவது ஆகும்; அன்றோ - அல்லவோ (என்றான்). வடவைத் தீ கடலின் நடுவில் பெண் குதிரை முகத்தில் தோன்றுவது; பிரளய கால நெருப்பு என்றும் கூறுவர். 134 3201. | 'தாது உண் சடிலத் தலை வைத்தது- தண் தரங்கம் மோதும் கடலிற்கிடை முந்து பிறந்தபோதே, ஓதும் கடுவைத் தன் மிடற்றில் ஒளித்த தக்கோன், "ஈதும் கடு ஆம்", என எண்ணிய எண்ணம் அன்றே? |
தண் தரங்கம் - குளிர்ந்த அலைகள்; மோதும் கடலிற்கிடை - வீசும் திருப்பாற் கடலிடையே இருந்து; முந்து பிறந்த போதே - முன்பு உதித்த காலத்தில்; ஓதும் கடுவை - கொடிதாய் உரைக்கப்படும் ஆலகால நஞ்சை; தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் - தன் கழுத்தில் மறைத்த சிவபெருமான்; தாது உண் சடிலம் - (கொன்றைப் பூவின்) மகரந்தம் மலிந்த சடை முடி சூழ்ந்த; தலை வைத்தது - தலைமீது பிறையை வைத்துக் கொண்டது; ஈதும் கடு ஆம் என - இதுவும் விடம் ஆகும் என்று; எண்ணிய எண்ணம் அன்றே - கருதிய கருத்தினால் அல்லவா? இப்பாடலின் கருத்து தற்குறிப்பேற்ற அணி. 135 3202. | 'உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள், ஓடித் திருமு இச் சிறு மின் பிறை, தீமை குறைந்தது இல்லை- கருமைக் கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின் பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ?' |
உரும் ஒத்த வலத்து - இடியேறு போல் வலிமையோடு; உயிர் நுங்கிய திங்கள் - என் உயிரை உண்ட முழு நிலவு; ஓடித் திருமு - சென்று |