பக்கம் எண் :

448ஆரணிய காண்டம்

மறைந்து மீண்டும் வந்த; இச் சிறு மின் பிறை - இந்தச் சிறிய ஒளி வீசும்
பிறை; தீமை குறைந்தது இல்லை - கொடுமையில் சிறிதும் குறைந்தது
அன்று; கருமைக் கறை நெஞ்சினில் - சினக் கொடுமை மிக்க நெஞ்சு
படைத்த; நஞ்சு கலந்த பாம்பின் - நச்சுத் தன்மையுடைய பாம்பினது;
பெருமை - பெரிய உருவோ?; சிறுமைக்கு - சிறிய உருவம் தானே;
(ஆயினும்) ஒரு பெற்றி - விடத் தன்மையில்; குறைந்தது உண்டோ -
சற்றும் குறைவுற்றதாகுமோ? (ஆகாது).

     பாம்பு சிறியதாயினும் பெரியதாயினும் நஞ்சுடைமை மாறுபடுவதில்லை.
முழு நிலவும் பிறைக் கீற்றும் கொடுமையில் அவ்வாறே அமைவன.
எடுத்துக் காட்டுவமை அணி.                                   136

3203.'கன்னக் கனியும் இருள்தன்னையும்
     காண்டும் அன்றே?
முன்னைக் கதிர் நன்று; இது
     அகற்றுதிர்; மொய்ம்பு சான்ற
என்னைச் சுடும்என்னின், இவ்
     ஏழ் உலகத்தும் வாழ்வோர்
பின்னைச் சிலர் உய்வர் என்று அங்கு
     ஒரு பேச்சும் உண்டோ?

    முன்னைக் கதிர் நன்று - முன்பு வந்த கதிரவனே (இப்பிறையினும்)
நன்றாகும்; இது அகற்றுதிர் - இப் பிறை நிலவை நீக்குமின்; மொய்ம்பு
சான்ற -
வலிமைமிக்க; என்னைச் சுடும் என்னின் - என்னையே இப்
பிறை துன்புறுத்தும் எனில்; இவ் ஏழ் உலகத்தும் வாழ்வோர் - ஏழு
உலகங்களிலும் வாழும் மக்களில்; பின்னைச் சிலர் - வேறு எவரேனும்
சிலர்; உய்வர் என்று - பிழைப்பர் என்று; அங்கு ஒரு பேச்சும்
உண்டோ -
அப்படிப் பேசவும் வாய்ப்பு உண்டோ? (இல்லை) எனவே;
கன்னக் கனியும் - கன்னங்கரேலெனச் செறியும்; இருள் தன்னையும்
காண்டும் அன்றே -
இருட்டின் இயல்பையும் காண்பது பொருத்தம்
அல்லவா? (என்றான்)

     இருளை வருமாறு கட்டளையிட்டான் என்பது கருத்து. பென்னம்
பெரிய என்றாற்போல 'கன்னக் கனிய' என்றார்.                    137

இருளினைப் பழித்தல்

3204.ஆண்டு, அப் பிறை நீங்கலும்,
     எய்தியது அந்தகாரம்;
தீண்டற்கு எளிது ஆய், பல
     தேய்ப்பன தேய்க்கல் ஆகி,
வேண்டின், கரபத்திரத்து
     ஈர்த்து விழுத்தல் ஆகி,