பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 449

காண்டற்கு இனிதாய், பல
     கந்து திரட்டல் ஆகி,

    ஆண்டு - ஆங்கு; அப்பிறை நீங்கலும் - அவ்விளம் பிறை
அகன்றதும்; தீண்டற்கு எளிதாய் - தொடுதற்கு எளிதானது போலவும்; பல
தேய்ப்பன தேய்க் கல் ஆகி -
பல பொருள்களையும் தேய்க்கத் தக்க
பாறை போலவும்; வேண்டின் - விரும்பினால்; கரபத் திரத்து ஈர்த்து
விழுத்தல் ஆகி -
வாளினால் அறுத்து வீழ்த்தலாம் தன்மை போலவும்;
காண்டற்கு இனிதாய் - பார்க்க இனியது போலவும்; பல கந்து திரட்டல்
ஆகி -
பல தூண்களாகத் திரண்டது போலவும்; எய்தியது அந்தகாரம் -
இருட்டு வந்து சேர்ந்தது.

     இருளின் அடர்த்தியும் திண்மையும் உணர்த்தப் பெற்றன.     138

3205.முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது
     என்? முற்றும் முற்றிப்
பொருள் தீங்கு இல் கேள்விச் சுடர்
     புக்கு வழங்கல் இன்றிக்
குருடு ஈங்கு இது என்ன, குறிக்கொண்டு,
     கண்ணோட்டம் குன்றி,
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது
     என்பது அவ் அந்தகாரம்.

    முருடு ஈர்ந்து - (அவ்விருள்) திரட்சியான மரமென அறுக்கத்
தக்கதாகி; உருட்டற்கு எளிது என்பது என் - கம்பமாய் உருட்சி செய்யத்
தக்கதாய் எளிதாக அமைந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?; பொருள்
முற்றும் முற்றி -
பொருள் அறிவு முழுமையாய் அடைந்து; தீங்கு இல்
கேள்விச் சுடர் -
குற்றமற்ற கேள்விச் செல்வமாகிய ஒளி; புக்கு வழங்கல்
இன்றி -
உட்புகுந்து வெளிச்சம் தராமல்; குருடு ஈங்கு இது என்ன -
இவ்வுலகில் மனக் குருடே உண்மையான குருடு எனும்படி; குறிக் கொண்டு-
அப் பெயருக்கு இலக்காகி; கண்ணோட்டம் குன்றி - அருள் நோக்குக்
குறைந்து; அருள் தீர்ந்த - அருள் அருகிப் போன; நெஞ்சின் - மனித
உள்ளத்தை விடவும்; அவ்வந்தகாரம் - அவ்விருளானது; கரிது என்பது -
கருமை என்று கூறத்தக்கதாம்.

     அறிவொளி சாரா உள்ளத்தை இருளுக்கு உவமித்தார்.     139

3206.விள்ளாது செறிந்து இடை, மேல்
     உற ஓங்கி, எங்கும்
நள்ளா இருள் வந்து, அகன்
     ஞாலம் விழுங்கலோடும்,