| காண்டற்கு இனிதாய், பல கந்து திரட்டல் ஆகி, |
ஆண்டு - ஆங்கு; அப்பிறை நீங்கலும் - அவ்விளம் பிறை அகன்றதும்; தீண்டற்கு எளிதாய் - தொடுதற்கு எளிதானது போலவும்; பல தேய்ப்பன தேய்க் கல் ஆகி - பல பொருள்களையும் தேய்க்கத் தக்க பாறை போலவும்; வேண்டின் - விரும்பினால்; கரபத் திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி - வாளினால் அறுத்து வீழ்த்தலாம் தன்மை போலவும்; காண்டற்கு இனிதாய் - பார்க்க இனியது போலவும்; பல கந்து திரட்டல் ஆகி - பல தூண்களாகத் திரண்டது போலவும்; எய்தியது அந்தகாரம் - இருட்டு வந்து சேர்ந்தது. இருளின் அடர்த்தியும் திண்மையும் உணர்த்தப் பெற்றன. 138 3205. | முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என்? முற்றும் முற்றிப் பொருள் தீங்கு இல் கேள்விச் சுடர் புக்கு வழங்கல் இன்றிக் குருடு ஈங்கு இது என்ன, குறிக்கொண்டு, கண்ணோட்டம் குன்றி, அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அவ் அந்தகாரம். |
முருடு ஈர்ந்து - (அவ்விருள்) திரட்சியான மரமென அறுக்கத் தக்கதாகி; உருட்டற்கு எளிது என்பது என் - கம்பமாய் உருட்சி செய்யத் தக்கதாய் எளிதாக அமைந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?; பொருள் முற்றும் முற்றி - பொருள் அறிவு முழுமையாய் அடைந்து; தீங்கு இல் கேள்விச் சுடர் - குற்றமற்ற கேள்விச் செல்வமாகிய ஒளி; புக்கு வழங்கல் இன்றி - உட்புகுந்து வெளிச்சம் தராமல்; குருடு ஈங்கு இது என்ன - இவ்வுலகில் மனக் குருடே உண்மையான குருடு எனும்படி; குறிக் கொண்டு- அப் பெயருக்கு இலக்காகி; கண்ணோட்டம் குன்றி - அருள் நோக்குக் குறைந்து; அருள் தீர்ந்த - அருள் அருகிப் போன; நெஞ்சின் - மனித உள்ளத்தை விடவும்; அவ்வந்தகாரம் - அவ்விருளானது; கரிது என்பது - கருமை என்று கூறத்தக்கதாம். அறிவொளி சாரா உள்ளத்தை இருளுக்கு உவமித்தார். 139 3206. | விள்ளாது செறிந்து இடை, மேல் உற ஓங்கி, எங்கும் நள்ளா இருள் வந்து, அகன் ஞாலம் விழுங்கலோடும், |
|