பக்கம் எண் :

சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 45

 முனைவன்; முது தேவரில்
     மூவர் அலார்
புனையும் முடி துன்று
     பொலங் கழலான்;

    அனையின் துறை நூல் வினையின் - வேள்வித் தீயிடத்து
சாத்திரங்களிற் கூறிய செயலின்படி; ஐம்பதொடு ஐம்பதும் தொகை
வேள்வி நிரப்பிய மா முனைவன் -
நூறு எனும் தொகை கொண்ட
அசுவமேத யாகங்களைச் செய்துமுடித்த பெருமை வாய்ந்த தலைவன்; முது
தேவரில் மூவர் அலார் -
பழமையான தேவர்களில்பிரமன், திருமால்,
சிவன் எனும் மூவர் அல்லாத மற்றைய தேவர்கள் யாவரும்; புனையும் முடி
துன்று பொலங்கழலான் -
தரித்துள்ள கிரீடங்கள் படிவதான பொன்னால்
அமைந்த வீரக் கழலைஅணிந்தவன் (இந்திரன்).

     நூறு யாகங்களை முடித்தவன் என்பதால் இந்திரனைச் சதமகன் என்பர்.
இந்திரன் மூவர்க்குஅடுத்தவன். அனை - அனல். எதுகை நோக்கித்
திரிந்தது துறை - ஏழாம் வேற்றுமைஉருபு.                          5

2592.செம் மா மலராள்
     நிகர் தேவியொடும்,
மும் மா மத வெண் நிற
     முன் உயர்தாள்
வெம் மா மிசையான்; விரி
     வெள்ளி விளங்கு
அம் மா மலை அண்ணலையே
     அனையான்;

    செம்மா மலராள் நிகர் தேவியொடும் - சிவந்த பெரிய தாமரை
மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற தன் மனைவியாம் சசியுடன்;
மும்மா மத வெண்நிற முன் உயர் தாள் வெம்மா மிசையான் - மூன்று
பெரியமதப்பெருக்குடையதும் வெள்ளை நிறமுடையதும் உயரமான
முன்னங்கால்களை உடையதுமான அச்சமூட்டும்ஐராவதம் எனும் யானை
மேல் வரும் இந்திரன்; விரி வெள்ளி விளங்கு அம்மா மலை
அண்ணலையேஅனையான்-
ஒளி பரந்த வெள்ளி போல் திகழும் அந்தப்
பெரிய கைலை மலைமேல் (உமையுடன்விளங்கும்) சிவனை ஒத்திருப்பவன்.

     மும்மதம் - கன்னமதம், கபோல மதம், பீசமதம் என்பன. இந்திரன்
தன் மனைவியுடன் ஐராவதயானை மேலிருப்பதற்குச் சிவன் உமையுடன்
கயிலை மேல் வீற்றிருப்பது உவமை. யானைக்கு மலையைஉவமிப்பது
கவிமரபு. யானையின் முன்னங்கால்கள் பின்னங்கால்களை விட உயரமானவை.
வெம்மா -மதம் பிடிப்பின் யானையின் உடல் வெப்பமாயிருத்தலைக்
குறிக்கும். கொடுமையும் அழகும்ஆம்.                              6