பக்கம் எண் :

450ஆரணிய காண்டம்

'எள்ளா உலகு யாவையும் யாவரும்
     வீவது என்பது
உள்ளாது, உமிழ்ந்தான், விடம் உண்ட
     ஒருத்தன்' என்றான்.

    விள்ளாது - துண்டு படாமல்; இடை செறிந்து - எங்கும்
இடைவெளியின்றி நிறைந்து; மேல் உற ஓங்கி - விண்ணையும் வளைத்து
வளர்ந்து; எங்கும் நள்ளா இருள் வந்து - எங்கும் பொருந்தாத இருள்
வந்து; அகன் ஞாலம் விழுங்கலோடும் - பரந்த உலகினை மூடி
மறைத்ததும்; விடம் உண்ட ஒருத்தன் - நஞ்சினை விழுங்கிய ஒப்பற்ற
சிவபெருமான்; எள்ளா உலகு யாவையும் - இகழத் தக்கதல்லாத எல்லா
உலகங்களையும்; யாவரும் - எல்லா மக்களையும் (பொருள்களையும்);
வீவது என்பது உள்ளாது - அழிக்கும் என்று கருதாமல்; உமிழ்ந்தான் -
அந்நஞ்சை உமிழ்ந்து விட்டான்; என்றான் - என்று (இராவணன்)
மொழிந்தான்.

     இப்பாடல் உருவக அணி.                                140

3207.'வேலைத்தலை வந்து ஒருவன்
     வலியால் விழுங்கும்
ஆலத்தின் அடங்குவது அன்று இது:
     அறிந்து உணர்ந்தேன்;
ஞாலத்தொடு விண் முதல் யாவையும்
     நாவின் நக்கும்
காலக் கனல் கார் விடம் உண்டு
     கறுத்தது அன்றே.

    வேலைத்தலை வந்து - திருப்பாற் கடலினின்றும் பிறந்து; ஒருவன்
வலியால் விழுங்கும் -
ஒப்பற்ற சிவபெருமான் தன் ஆற்றலால் உண்ட;
ஆலத்தின் - ஆலகால விடம் எனும் ஒன்றில்; இது - இவ்விருள்;
அடங்குவதன்று - அடக்கத் தக்கதன்று; அறிந்து உணர்ந்தேன் -
இதனை யான் தெளிந்து கொண்டேன்; ஞாலத்தொடு விண்முதல்
யாவையும் -
மண்ணையும் விண்ணையும் யாவற்றையும்; நாவின் நக்கும் -
தன் நாவால் தீண்டி அழிக்கும்; காலக் கனல் - ஊழிக் காலமாகிய
நெருப்புப் பாம்பு; கார்விடம் உண்டு - கரிய விடத்தைத் தேக்கி; கறுத்தது
அன்றே -
கருமை பூண்டதை ஒக்கும் அன்றோ?

     ஆலகால நஞ்சு சிவனால் விழுங்கப்பட்டுவிட்டது; இந்த இருளை
விழுங்கும் சக்தி வேறு எதுவுமே இல்லை. விழுங்கப்பட முடியாத இந்த
இருளாகிய நஞ்சு மண் முதல் விண் ஈறாக உள்ள அனைத்தையும்
விழுங்கிவிடும். தற்குறிப்பேற்ற அணி. நாவின் நக்கும் என்றமையால் காலக்
கனலாகிய பாம்பு என வருவிக்கப்பட்டது.                          141