| கண்டேன்; இவர் போல்வது ஓர் பெண் உருக் கண்டிலேனால்; உண்டே எனின், வேறு இனி, எங்கை உணர்த்தி நின்ற வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே. |
பண்டு ஏய் உலகு ஏழினும் - முன்னமே ஏழு உலகங்களிலும்; உள்ள படைக்கணாரைக் கண்டேன் - இருக்கும் மகளிரைப் பார்த்துள்ளேன்; இவர் போல்வதோர் பெண் உருக் கண்டிலேன் - அவர்களிடையே இவ் வடிவம் போல் ஓர் பெண் உருவை நான் கண்டதில்லை; இனி வேறு உண்டே எனின் - உலகிலுள்ள பெண்களிலிருந்து மாறுபட்டதே இவ்வுரு என்றால்; எங்கை உணர்த்தி நின்ற - என் தங்கை சூர்ப்பணகை குறித்துச் சொன்ன; வண்டு ஏறு கோதை மடவாள் - வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய இளநங்கை; இவள் ஆகும் - இவளே ஆவாள். (அன்றே - தேற்றம்; ஆல் - அசை) படைக் கண்ணார் - அம்பு, வாள் போன்ற கண்களை உடைய பெண்கள். இதுவரை காணாத அழகு என்பதால் சூர்ப்பணகை குறிப்பிட்டது அவளேயாகும் இவள் எனக் கருதினான். 145 3212. | 'பூண்டு இப் பிணியால் உறுகின்றது, தான் பொறாதாள், தேண்டிக் கொடு வந்தனள்; செய்வது ஓர் மாறும் உண்டோ? காண்டற்கு இனியாள் உருக் கண்டவட் கேட்கும் ஆற்றால், ஈண்டு, இப்பொழுதே, விரைந்து, எங்கையைக் கூவுக' என்றான். |
(இவ்வாறு கருதிய இராவணன் மேலும் எண்ணலானான்) 'பூண்டு இப்பிணியால் - காதல் நோய் பொருந்தி அந்த நோயால்; உறுகின்றது தான் பொறாதாள் - (யான்) வருந்துவதை அறிந்து பொறாதவளாய்; தேண்டிக் கொடு வந்தனள் - (சீதை) என்னைத் தேற்றும் பொருட்டுத் தேடிக் கொண்டு வந்து விட்டாள்; செய்வது ஓர் மாறும் உண்டோ? - யான் இவளுக்குச் செய்யத்தக்க கைம்மாறு ஏதும் உண்டா? (இல்லை); காண்டற்கு இனியாள் - கண்டு களிக்க இனியவளான சீதையினது; உருக் கண்டவள் - வடிவத்தை நேரிற்கண்ட சூர்ப்பணகையை; கேட்கும் ஆற்றால் - வினவி உண்மை அறியும் பொருட்டு; ஈண்டு இப்பொழுதே - இதோ இந்தக் கணமே; விரைந்து - விரைவாக; |