பக்கம் எண் :

454ஆரணிய காண்டம்

எங்கையைக் கூவுக' என்றான் - என் தங்கையை அழையுங்கள் என்று
ஆணையிட்டான்.

     உருவெளித் தோற்றத்தைச் சீதையென மயங்கியவன் உண்மை அறியத்
தங்கையை அழைத்தான்.                                       146

3213. என்றான் எனலும், கடிது
     ஏகினர் கூவும் எல்லை,
வன் தாள் நிருதக் குலம்
     வேர்அற மாய்த்தல் செய்வாள்,
ஒன்றாத காமக் கனல்
     உள் தெறலோடும், நாசி,
பொன் தாழ் குழைதன்னொடும்
     போக்கினள் போய்ப் புகுந்தாள்.

    என்றான் எனலும் - இவ்வாறு இராவணன் கட்டளையிட்டான்
என்றதும்; (பணியாளர்); கடிது ஏகினர் கூவும் எல்லை - விரைந்து சென்று
(சூர்ப்பணகையை) அழைத்த பொழுதில்; வன்தாள் நிருதக் குலம் - வலிய
முயற்சியை உடைய அரக்கர் மரபை; வேர் அற மாய்த்தல் செய்வாள் -
ஆணி வேரோடு அழிக்கப் பிறந்த அவள்; நாசி - மூக்கையும்; பொன்தாழ்
குழை தன்னொடும் -
பொன்னாலாகிய குழையணிந்த செவியையும்;
போக்கினள் - பறி கொடுத்தவள்; ஒன்றாத காமக் கனல் - ஒரு
தலையாய்ப் பிறந்த காம நெருப்பு; உள் தெறலோடும் - மனத்தை
வருத்தும் நிலையில்; போய்ப் புகுந்தாள் - அங்கு வந்து சேர்ந்தாள்.

     சேர்ந்தாரை அழிக்கும் நெருப்புப் போன்றது காமமென்பதால்
காமக்கனல் என்றார்.                                         147

இராவணன் சூர்ப்பணகை உரையாடல்

3214.பொய்ந் நின்ற நெஞ்சின்
     கொடியாள் புகுந்தாளை நோக்கி,
நெய்ந் நின்ற கூர் வாளவன், 'நேர்
     உற நோக்கு; நங்காய்!
மைந் நின்ற வாள்-கண் மயில் நின்றென
     வந்து, என் முன்னர்
இந் நின்றவள் ஆம்கொல்,
     இயம்பிய சீதை?' என்றான்.

    நெய்ந் நின்ற கூர் வளாவன் - நறு நெய் பூசிய கூரிய வாளை
உடைய இராவணன்; பொய்ந்நின்ற நெஞ்சின் - பொய் குலவும் மனம்
உடைய; கொடியாள் புகுந்தாளை நோக்கி - கொடிய சூர்ப்பணகை அங்கு