போன்று; நீர்தரு சந்திர காந்தத்தாலே - நீர் சுரப்பதாகிய சந்திர காந்தம் என்னும் கற்களாலே; சிறந்து ஆர் மணிமண்டபம் - சிறந்து விளங்கும் எழில் மிகு மணி மண்டபம் ஒன்றை; செய்க என - சமைக்க வேண்டும்' என; செப்புக என்றான் - சிற்பக் கலைஞரிடம் கூறுங்கள்" எனப் பணித்தான். சந்திரகாந்தம் - சந்திர கிரணம் பட்டதும் நீர் சொரியும் ஒரு வகைக்கல் சந்திர காந்தக் கல்லாலாகிய கட்டடம் பற்றி முன்னும் (122) கம்பர் குறித்திருக்கிறார். குளிர்ச்சியை நாடி இவ்வாறு கூறினான். செப்புக என்றது தெய்வச் சிற்பியைக் கருதிக் கூறியது. 155 3222. | வந்தான் நெடு வான் உறை தச்சன்; மனத்து உணர்ந்தான்; சிந்தாவினை அன்றியும், கைவினை யாலும் செய்தான்- அம் தாம நெடுங் தறி ஆயிரத் தால் அமைந்த சந்து ஆர் மணி மண்டபம், தாமரை யோனும் நாண. |
நெடுவான் உறை தச்சன் - உயர்ந்த தேவருலகத் தச்சனான விசுவகர்மா; மனத்து உணர்ந்தான் - இராவணன் கட்டளையைத் தன் மனதில் உணர்ந்து கொண்டவனாய்; வந்தான் - அங்கு வந்து சேர்ந்தான்; அம் தாம நெடுந்தறி ஆயிரத்தால் - அழகிய ஒளி் மிக்க ஆயிரம் நெடுந்தூண்களால்; அமைந்த சந்தார் மணிமண்டபம் - அமைவதான அழகு பொலியும் சந்திர காந்த மணி மண்டபத்தை; தாமரையோனும் நாண- படைப்புக் கடவுளாகிய பிரமனும் வெட்கப்படும்படியாக; சிந்தா வினைஅன்றியும் - சிந்தித்து உருவாக்கிய தோடன்றி; கைவினையாலும் செய்தான் - கைவினைத் திறன் மிளிரவும் செய்து முடித்தான். சந்து - அழகு நினைவினாலும் திட்டமிட்ட செயலாலும் எழில் கூட்டி மண்டபம் அமைத்தான் விசுவகர்மா. வெற்றி பெறுதற்குத் திட்டமும் வேண்டும்; வினை செயல் வகையும் வேண்டும். இதை இச் செய்யுள் உணர்த்தியது. 156 3223. | காந்தம், அமுதின் துளி கால்வன, கால மீனின் வேந்தன் ஒளி அன்றியும், மேலொடு கீழ் விரித்தான்; பூந் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான்; |
|