பக்கம் எண் :

460ஆரணிய காண்டம்

ஏந்தும் மணிக் கற்பகச்
     சீதளக் கா இழைத்தான்.

    கால மீனின் வேந்தன் - விண்மீன்களின் தலைவனாகிய சந்திரன்;
ஒளி அன்றியும் அமுதின் துளி கால்வன - ஒளி படராத போதும் அமுத
நீரின் துளிகள் சிதறுவனவாகிய; காந்தம் மேலொடு கீழ் விரித்தான் -
சந்திர காந்தக் கற்களை மேலிருந்து கீழ் வரை அமைத்தான்; பூந் தென்றல்
புகுந்து உறை சாளரமும் புனைந்தான் -
பூ மணக்கும் தென்றல் காற்று
உள்ளே வரும்படியாகப் பலகணிகளும் உருவாக்கினான்; ஏந்தும் மணிக்
கற்பக -
விரும்பியவற்றை ஏந்தி அளிக்கும் மாணிக்கம் திகழும் கற்பக
மரங்களின்; சீதளக் கா இழைத்தான் - குளிர்ச்சியான சோலையையும்
உடன் அமைத்து வைத்தான் (விசுவகர்மா).

     சந்திர கிரணம் படாத போதும் நீர் சுரக்கும் சந்திர காந்தம் என்ற
சிறப்புமிக்க கற்களால் மண்டபம் அமைந்தது என வனப்பினை உயர்த்திக்
கூறினார்.                                                  157

3224. ஆணிக்கு அமை பொன் கை, மணிச்
     சுடர் ஆர் விளக்கம்
சேண் உற்ற இருள் சீப்ப, அத்
     தெய்வ மடந்தைமார்கள்
பூணின் பொலிவார் புடை ஏந்திட,
     பொங்கு தோளான்
மாணிக்க மானத்திடை மண்டபம்
     காண வந்தான்.

    ஆணிக்கு அமை பொன் கை - ஆணிப் பொன் அணிகலன்கள்
அணிந்த கரத்தில்; மணிச் சுடர் ஆர் விளக்கம் - ஒளிச் சுடர் பொருந்திய
விளக்குகளை எந்தி; பூணின் பொலிவார் - நகைகளை அழகுற
அணிந்தவரான; அத் தெய்வ மடந்தை மார்கள் - அந்தத்
தேவமங்கையர்; புடை ஏந்திட - இருபுறமும் எடுத்து வர; சேண் உற்ற
இருள் சீப்ப -
வான்முழுதும் செறிந்த இருள் சிதறி ஓட; பொங்கு
தோளான் -
விம்மிய (இருபது) தோள்களை உடைய இராவணன்; மாணிக்க
மானத்திடை -
ஒரு மாணிக்க விமானம் ஏறி; மண்டபம் காண வந்தான் -
அம்மணி மண்டபம் காண வருகை தந்தான்.

     தேவ மகளிர் மணி விளக்கெடுப்ப, இராவணன் மாணிக்க விமானத்தில்
மணி மண்டபம் காண வந்தான்.                                 158

3225. அல் ஆயிரகோடி
     அடுக்கியது ஒத்ததேனும்,