பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 461

நல்லார் முகம் ஆம், நளிர் வால்
     நிலவு ஈன்ற, நாமப்
பல ஆயிரகோடி பனிச் சுடர்
     ஈன்ற, திங்கள்
எல்லாம் உடன் ஆய், இருள்
     ஓட இரித்தது அன்றே.

    அல் ஆயிர கோடி அடுக்கியது ஒத்ததேனும் - ஆயிரம் கோடி
இருட்டை அடுக்கியது போல் இருள் செறிந்திருந்ததாயினும்; நல்லார் முகம்
ஆம் -
தேவமாதரின் முகங்களான; நளிர் வால் நிலவு ஈன்ற - குளிர்ந்த
வெண்ணிலவுகளில் பிறந்த; நாமப் பல் ஆயிர கோடி - பெருமைமிக்க பல
கோடி நூறாயிரம்; பனிச் சுடர் ஈன்ற திங்கள் - குளிரொளி தரும் சந்திரப்
பேரொளிகள்; எல்லாம் உடன் ஆய் - எல்லாம் ஓரிடத்தே திரண்டாற்
போன்ற ஒளி பெருக; இருள் ஓட இரித்தது அன்றே - இருட்டு ஓடித்
தோற்று மறைந்தது அன்றோ?

     அல் ஆயிரகோடி அடுக்கியது - தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.
மகளிர் முகங்களால் இருள் ஒழிந்தது - உயர்வு நவிற்சி அணி.     159

3226.பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும்
    பூவில் நின்ற
கற்பத் தருவின் கதிர் நாள்
     நிழற் கற்றை நாற,
அல் பற்று அழிய, பகல்
     ஆக்கியதால் - அருக்கன்
நிற்பத் தெரிக்கின்றது நீள் சுடர்
     மேன்மை அன்றோ?

    பொற்பு உற்றன ஆய் - அழகு பொருந்தியனவாய்; கற்பத் தருவின்
பூவில் நின்ற -
கற்பக மரத்தின் பூக்களாய்ப் பொருந்திய; மணி ஒன்பதும்
-
நவரத்தினங்களும்; கதிர் நாள் நிழல் கற்றை நாற - கதிரவனின்
பகற்கால ஒளிக்கிரணங்கள் போல் தோன்ற; அல் பற்று அழிய - இருளின்
பிடிப்புச் சிதையும்படி; பகல் ஆக்கியது - பகற் பொழுதை உருவாக்கியது;
அருக்கன் நிற்பத் தெரிக்கின்றது - சூரியன் மறைந்து நிற்கவும்
ஒளியானது வீசிக் கொண்டிருப்பது; நீள் சுடர் மேன்மை அன்றோ -
கற்பக மரங்களிலிருந்து பெருகும் ஒளியின் சிறப்பு அல்லவா?

     கற்பக மரங்களின் பூக்கள் தரும் ஒளியை வியந்தவாறாம்.
கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், முத்து, மாணிக்கம்,
வைரம், வைடூரியம் என்பன நவமணிகள்.                          160