மலர்களாலும் சமைத்த; சீதளச் சேர்க்கை - குளிர்ச்சியான படுக்கை அமைந்திருக்க; சார்ந்தான் - (அதனை இராவணன்) அடைந்தான். அமுதப் பாற்கடல் போன்றிருந்த பூந்தளிர்ப் படுக்கை, தவம் பலனை எதிர் நோக்காது செய்யப்படுவது. ஆயினும் எதனையும் தரவல்லது. இதனைத் 'கண்டல் இல் தவம்' என்றார். 162 தென்றலைச் சீறல் 3229. | நேரிழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி, வேரி அம் சரளச் சோலை வேனிலான் விருந்து செய்ய, ஆர் கலி அழுவம் தந்த அமிழ்தென, ஒருவர் ஆவி தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே. |
நேரிழை மகளிர் கூந்தல் - நல்ல அணிகலன்கள் அணிந்த பெண்களின் கூந்தலில்; நிறை நறை வாசம் நீந்தி - நிறைந்த (மலர்களின்) தேனும் மணமும் தோய்ந்து; வேரி அம் சரளச் சோலை - நறுமணம் நிரம்பிய அழகிய இனிய சோலைகளில்; வேனிலான் விருந்து செய்ய - மன்மதனுக்கு விருந்து வைக்கும் முகத்தான்; ஆர்கலி அழுவம் தந்த அமிழ்தென - ஓசைமிக்க கடல் உவந்தளித்த அமுதம் போன்றதும்; ஒருவர் ஆவி தீரினும் - ஒருவர் உயிர் போகும் பொழுதிலும்; உதவற்கு ஒத்த - அதனை மீட்டுத் தர வல்லதான; தென்றல் - தென்றற் காற்று; வந்து இறுத்தது - அங்கு வந்து சேர்ந்தது (அன்றே - அசை). உயிர் போகும் போதும் மீட்டுத் தரும் இனிய தென்றல் இங்கு இராவணன் உயிரைப் பறிப்பது போல் வந்தது தோன்ற இவ்வாறு கூறினார். 163 3230. | சாளரத்தூடு வந்து தவழ்தலும், தரித்தல் தேற்றான்; நீள் அரத்தங்கள் சிந்தி, நெருப்பு உக, நோக்கும் நீரான்; வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வரக் கண்டன்ன கோள் உறக் கொதித்து விம்மி, உழையரைக் கூவிச் சொன்னான்: |
நீள் அரத்தங்கள் சிந்தி - நெடிய இரத்தத் துளிகள் சிந்தி; நெருப்பு உக - தீப்பொறிகளும் கக்கும்படி; நோக்கும் நீரான் - சினமுடன் பார்க்கும் |