பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 471

     மானுடர் என இராமலக்குவரைக் குறித்தான். மாரீசன் மாமன் முறை
என்பதால் சூர்ப்பணகையை மருகி என்றான்.                      4

3241.'திருகு சினத்தார் முதிர மலைந்தார்;
     சிறியோர், நாள்
பருகினன் என்றால், வென்றி நலத்தில்
     பழி அன்றோ?
இரு கை சுமந்தாய்! இனிதின் இருந்தாய்!
     இகல் வேல் உன்
மருகர் உலந்தார்; ஒருவன் மலைந்தான்,
     வரி வில்லால்.

    ஒருவன் - ஒரு மானுடன் (சூர்ப்பணகையை மான பங்கம்
செய்தமையால்); திருகு சினத்தார் - பெருகும் சினமுடைய வரும்; முதிர
மலைந்தார் -
முற்றிய போரில் ஈடுபட்டவரும்; சிறியோர் - எனக்கும்
இளையவருமாகிய கரன் முதல் வீரருடைய; நாள் - வாழ்நாளை;
வரிவில்லால் மலைந்தான் - கட்டமைந்த வில்லால் போரிட்டு; பருகினன்
என்றால் -
அழித்து முடித்தான் என்றால்; வென்றி நலத்தில் - இதுவரை
வெற்றியே பெற்று வந்த என் பெருமைக்கு; பழியன்றோ - அது
இழுக்காகுமன்றோ?; இகல்வேல் உன் மருகர் - கொடிய வேலேந்திய உன்
மருமக்கள்; உலந்தார் - அழிந்தனர்; இருகை சுமந்தாய் - இரண்டு
கைகளையும் இன்னும் சுமந்தபடியாக; இனிதின் இருந்தாய் - மகிழ்வோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறாயே (இது சரிதானா?)

     கரன், திரிசிரன், தூடணன் என்பார் இராவணனுக்குத் தம்பி
முறையாவதால் சிறியார் என்றும் மாரீசன் மருகர் என்றும்குறிக்கப்பட்டனர். 5

3242.'வெப்பு அழியாது என் நெஞ்சும்
     உலர்ந்தேன், விளிகின்றேன்.
ஒப்பு இலர் என்றே, போர் செயல்
     ஒல்லேன்; உடன் வாழும்
        துப்புஅழி செவ் வாய் வஞ்சியை
     வௌவ, துணை கொண்டிட்டு
இப் பழி நின்னால் தீரிய வந்தேன்,
     இவண்' என்றான்.

    வெப்பு அழியாது - (முற்கூறிய நிகழ்ச்சியால்) மனத்தின் வெப்பம்
தணியாமல்; என் நெஞ்சும் உலர்ந்தேன் - என் உள்ளமும் வாடினேன்;
விளிகின்றேன் - உயிரும் அழிகின்றேன்; ஒப்பு இலர் என்றே -
அம்மானுடர் என் ஆற்றலுக்கு நிகர் ஆகாதார் என்பதால்; போர் செயல்
ஒல்லேன் -
அவர்களோடு போரிடவும் விருப்பம் கொள்ளேன்; உடன்
வாழும் துப்பு அழி செவ்வாய் -
பவளத்தை வெல்லும் சிவந்த இதழ்களை
உடைய;