பக்கம் எண் :

472ஆரணிய காண்டம்

வஞ்சியை வௌவ - சீதையைக் கவர்ந்து வர; துணை கொண்டிட்டு -
உன் உதவியை மேற்கொள்ள வேண்டியும்; இப்பழி நின்னால் தீரிய -
எனக்கு நேர்ந்த அவமானத்தை உன்னால் துடைப்பதற்கு வேண்டியும்;
இவண் வந்தேன் - இங்கு (உன்பால்) வந்தேன்; என்றான் - என்று
இராவணன் மொழிந்தான்.

     என்னுடைய சகோதரியை அவர்கள் இழிவுபடுத்தியதால்அவர்களுடன்
இருக்கும் சீதையைக் கவர்ந்து அவர்களைஇழிவுபடுத்துவேன் எனத் துணை
நாடினான் இராவணன்.                 6

மாரீசன் அறிவுரை

3243. இச் சொல் அனைத்தும் சொல்லி,
     அரக்கன், எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன்
     என்னக் கிளராமுன்,
'சிச்சி' என, தன் மெய்ச் செவி
     பொத்தி; தெருமந்தான்;
அச்சம் அகற்றி, செற்ற
     மனத்தோடு அறைகின்றான்;

    எரிகின்ற கிச்சின் - பற்றி எரியும் தீயில்; உருக்கு இட்டு -
இரும்பைப் போட்டுக் காய்ச்சி; உய்த்தனன் என்ன - அதனைச் செவியில்
பாய்ச்சினாற் போன்று; அரக்கன் - இராவணன்; இச்சொல் அனைத்தும்
சொல்லி -
இவ்வாறு (தன் உணர்வுகளைச் சுமந்த) சொற்களை எல்லாம்
கூறி; கிளராமுன் - தூண்ட முற்படு முன்; (மாரீசன்); சிச்சி எனத்தன்
மெய்ச் செவி பொத்தி -
சீச்சீ என்று தன் செவிகளை மூடி; தெருமந்தான்
-
தடுமாறினான்; (அதன் பிறகு); அச்சம் அகற்றி - இராவணனிடம்
கொண்ட பயத்தை நீக்கி; செற்ற மனத்தோடு - சினம் பொங்கும்
உள்ளத்தோடு; அறைகின்றான் - சொல்லத் தொடங்கினான்.

     கிச்சு - நெருப்பு; கிருசாநு என்ற வடசொல்லின் திரிபு என்பர்,
உருக்கு - உருக்கப்படுவதால் பெற்ற காரணப் பெயர்.                 7

3244.'மன்னா! நீ உன் வாழ்வை
     முடித்தாய்; மதி அற்றாய்;
உன்னால் அன்று ஈது; ஊழ்வினை
     என்றே உணர்கின்றேன்;
இன்னாவேனும் யான் இது
     உரைப்பென் இதம்' என்னா,
சொன்னான் அன்றே அன்னவனுக்குத்
     துணிவு எல்லாம்.