பக்கம் எண் :

474ஆரணிய காண்டம்

மறத் திறனாலோ? சொல்லுதி-சொல்
     ஆய் மறை வல்லோய்!
அறத் திறனாலே எய்தினை அன்றோ?
     அது, நீயும்
புறத் திறனாலே பின்னும்
     இழக்கப் புகுவாயோ?

    'சொல் ஆய் மறை வல்லோய் - ஆய்ந்தெடுத்த சொற்களால்
உருவான வேதங்களில் பயிற்சி உடையவனே; திறத்திறனாலே - அறநெறி
நின்று; செய்தவம் முற்றி - கடுந்தவம் நிறைவுற்று; திரு உற்றாய் - செல்வ
வளம் எய்தினாய்; மறத்திறனாலோ சொல்லுதி - (அன்றி) அதரும
நெறியினாலோ அவை உனக்குக் கிடைத்தன என்று எண்ணிக் கூறுவாயாக;
அறத்திறனாலே - நல்லற வழியினாலே; எய்தினை அன்றோ -
அனைத்து நலமும் பெற்றாய் அல்லவா; பின்னும் - மீண்டும்;
புறத்திறனாலே - அறத்திற்குப் புறம்பான வழியிலே; அது நீயும் - அச்
செல்வத்தை நீ தான்; இழக்கப் புகுவாயோ? - தொலைக்கும் வழியில்
செல்லுவாயோ.

     நீயும் - உயர்வு சிறப்பு உம்மை.                            10

3247.'நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார்,
     நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று
     ஒருவற்காய் மனை வாழும்
தாரம் கொண்டார், என்ற
     இவர்தம்மைத் தருமம்தான்
ஈரும் கண்டாய்; கண்டகர்
     உய்ந்தார் எவர்? ஐயா!

    'நாரம் கொண்டார் - அன்பு பூண்டாரது; நாடு கவர்ந்தார் -
நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்களும்; நடை அல்லா - நீதி நெறிக்குப்
பொருந்தாத; வாரம் கொண்டார் - வரிப் பொருளை (க் குடிமக்களை
வருத்திப்) பெற்றவர்களும்; மற்றொருவற்காய் - பிறர் ஒருவருக்கு
உரிமையாய்; மனை வாழும் தாரம் கொண்டார் - அவர் இல்லத்திலே
வாழும் மனைவியை வசப்படுத்திக் கொண்டவரும்; என்றிவர் தம்மை -
எனப்படும் இவர்களை; தருமம் தான் - அறக் கடவுள்தானே; ஈரும்
கண்டாய் -
(சின்னா பின்னமாக்கி) அழித்து விடுவான் என அறிவாய்;
ஐயா - தலைவனே; கண்டகர் உய்ந்தார் எவர் - கொடியவருள் எவர்
தப்பிப் பிழைத்துள்ளார்?' (எவரும் இல்லை).