பக்கம் எண் :

476ஆரணிய காண்டம்

உன் எண்ணப்படி (சீதையைச் சிறைபிடிப்பதில் வெற்றி பெற்றாலும்; உலகு
ஈன்றான் இராமன் -
உலகையெல்லாம் படைத்தளிக்கும் இராமபிரான்;
வைதால் அன்ன வாளிகள் கொண்டு - (முனிவர்) சாபம் போன்ற கூரிய
அம்புகளால்; உன்குழு எல்லாம் - உன் இனம் முழுவதையும்; உன்
வழியோடும் -
உன் சந்ததிகளோடும் சேர்த்து; கொற்றம் முடித்து -
உங்கள் வெற்றி (வரலாறு) முடித்து; கொய்தான் அன்றே - நிச்சயமாய்
அழித்துவிடுவான்.

     பாவம் மறுமையையும், பழி இம்மையையும் அழிக்கும் என்பது
கருத்து. உன்னால் உன் குலமும் அழியும் என எச்சரித்தான்.

     வைதாலன்ன வாளிகள் - பால காண்டம் தாடகை வதைப் படலத்தில்,
'சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம்' (378) என்பதனோடு ஒப்பு
நோக்கத்தக்கது. எய்தாது, எய்தாது - அடுக்கு, உறுதியை வலியுறுத்தியது.
நிகழ்ந்தே தீருமென்ற உறுதியால் கொய்தான் என்று இறந்த காலத்தில்
குறித்தான்; கால வழுவமைதி.                                    13

3250.'என்றால், என்னே! எண்ணலையே நீ,
    கரன் என்பான்,
நின் தானைக்கு மேல் உளன் என்னும்
     நிலை? அம்மா!
தன் தானைத் திண் தேரொடும்
     மாளத் தனு ஒன்றால்
கொன்றான்; முற்றும் கொல்ல,
     மனத்தில் குறிகொண்டான்.

    என்றால் - இவ்வாறு நான் அறிவுரை கூறினாலும்; என்னே நீ
எண்ணலையே -
ஏனோ நீ சிந்தித்துப் பார்க்க மறுக்கின்றாயே; நின்
தானைக்கு மேல் என்னும் நிலை உளன் -
உன் படைகளுக்குத்
தலைவனாக உயர் நிலையில் இருந்த; கரன் என்பான் - கரன் என்னும்
வீரன்; தன் தானை - தன் சேனைகளோடும்; திண் தேரொடும் மாள -
வலிமை மிக்க தேர்ப் படைகளோடும் அழியும்படி; தனு ஒன்றால்
கொன்றான் -
ஒப்பற்ற தன் வில்லால் கொன்ற இராமன்; முற்றும் கொல்ல-
அரக்கர் இனம் முழுதையும் அழிக்க; மனத்தில் குறி கொண்டான் -
இப்போது மனத்திற் கருதி இருக்கின்றான்; அம்மா - இந்நிலை
இரங்கத்தக்கது.

     கரன் முதலியோரை அழித்தமை அவன் 'கூட்டு ஒருவரையும்
வேண்டாக் கொற்றவன்' என்பதைக் காட்டும். அவ்வாறிருந்தும் நீ அறிவு
பெற்றாய் இல்லை என்றான் மாரீசன்.                              14

3251.'வெய்யோர் யாரே, வீர விராதன்
     துணை வெய்யோர்?