பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 477

  ஐயோ! போனான், அம்பொடும், உம்பர்க்கு
அவன் என்றால்,
உய்வார் யாரே நம்மில் எனக்
     கொண்டு, உணர்தோறும்,
நையாநின்றேன்; நீ இது
     உரைத்து நலிவாயோ?

    வெய்யோர் - கொடியவர்களில்; வீர விராதன் துணை வெய்யோர்-
வீரனாகிய விராதனுக்கு இணையான கொடியவர்; யாரே - யார் உளர்?;
அம்பொடும் - (இராமபிரான்) அம்பினால்; ஐயோ - என்ன பரிதாபம்!;
உம்பர்க்கு அவன் போனான் என்றால் - வானுலகுக்கு அவனும்
கொல்லப்பட்டுச் சென்றான் எனில்; நம்மில் யாரே உய்வார் -
(அவ்விராமனிடமிருந்து) நம்மவரில் யார்தான் தப்பிப் பிழைக்க முடியும்?;
எனக்கொண்டு - என்று கருதி; உணர்தோறும் நையா நின்றேன் -
எண்ண, எண்ண நொந்திருக்கின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ? -
இப்போது (இவ்வாறு என்னிடம்) மேலும் கூறி என் வருத்தத்தை
மிகுதிப்படுத்துவாயோ?

     விராதன் வதை நமக்கு ஒரு பாடமன்றோ என மாரீசன் எடுத்துக்
கூறினான். விராதனை இராமலக்குவர் வாளால் அழித்தனர். (2550) இங்கே
அம்பு என்றது ஆயுதம் என்ற பொருளில் கொள்ளத்தக்கது.15

3252.'மாண்டார், மாண்டார்; நீ இனி
     மாள்வார் தொழில் செய்ய
வேண்டா, வேண்டா; செய்திடின்,
     உய்வான் விதி உண்டோ?
ஆண்டார் ஆண்டார் எத்தனை
     என்கேன்? அறம் நோனார்,
ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்?
     எல்லாம் இலர் அன்றோ?

    மாண்டார் மாண்டார் - ஏற்கெனவே இறந்தவர்கள் இறந்து
போயினர்; இனி நீ - இனிமேல் நீ; மாள்வார் தொழில் செய்ய -
மரணமுறப் போகின்றவர்கள் செயத் தக்க செயலைச் செய்ய; வேண்டா
வேண்டா -
(அருள் கூர்ந்து) முற்பட வேண்டாம்; செய்திடின் - நீ
அவ்வாறு செய்வாயானால்; உய்வான் விதி உண்டோ - தப்பிப் பிழைக்க
வழியும் உண்டோ? (இல்லை); ஆண்டார் ஆண்டார் - உனக்கு முன்னே
இவ்வுலகை ஆண்டு சென்றோர்; எத்தனை என்கேன் - எத்தனையென்று
கணக்குரைக்க முடியாது; அறம் நோனார் - அறத்தை நோற்காதவர்;
ஈண்டார் - நிலை பெற்று நின்றதில்லை; ஈண்டு ஆர் நின்றவர் -
(மேலும்) இவ்வுலகில்