பக்கம் எண் :

48ஆரணிய காண்டம்

    செற்றி கதிரின் பொலி - பதிக்கப் பெற்றுக் கிரணங்களால் ஒளி வீசி
நிற்கும்; செம்மணியின் சுடர்க்கற்றை - சிவந்த மாணிக்கங்களின் ஒளியின்
தொகுதி;விட்டு எரி கஞ்சுகியான் - வெளி விட்டு ஒளி வீசும் மேல்
அங்கி உடையான்; வெற்றித் திருவின் குளிர் வெண் நகை போல் -
விசயலக்குமியின் குளிர்ந்த வெண்பற்களின்சிரிப்புப் போல்; சுற்றிக் கிளரும்
சுடர்தோள் வளையான் -
சுற்றி விளங்குகின்ற ஒளிவீசும் தோள்
வளையங்களை உடையவன் (இந்திரன்).

     செற்றி - ஒளி பெறச் செதுக்கி என்பர். சிலர் தோள் வளைகளை
வெண்ணகைக்குஉவமையாக்கியதால் அவ்வணி முத்துக்கள் பதித்தவை
எனலாம். தோள்வளையம் - வாகுவலயம் எனும்அணி. கஞ்சுகி - கவசம்
என்பாருமுளர்.                                                10

2597.பல் ஆயிரம் மா மணி
     பாடம் உறும்
தொல் ஆர் அணி கால்
     சுடரின் தொகைதாம்
எல்லாம் உடன் ஆய்
     எழலால், ஒரு தன்
வில்லால், ஒளிர் மேகம்
     எனப் பொலிவான்;

    பல் ஆயிரம் மாமணி பாடம் உறும்- பல ஆயிரக்கணக்கான சிறந்த
மாணிக்கங்கள் ஒளிவீசும்; தொல் ஆர் அணி கால் சுடரின்தொகை -
பழமைச் சிறப்புற்ற நகைகள் வெளியிடும் ஒளியின் கூட்டம்; எல்லாம் உடன்
ஆய் எழலால் -
எல்லாம் ஒன்று சேர்ந்து மேலே கிளம்புதலால்; ஒரு தன்
வில்லால் -
இணையற்ற தன் இந்திரவில் எனும் வானவில்லால்; ஒளிர்
மேகம் எனப் பொலிவான் -
விளங்கும் கரு மேகம் போல விளங்குபன்
(இந்திரன்). தாம் - அசை.

     பாடம் - ஒளி, நகைகளின் சிறப்பைப் பழமை உணர்த்தும். இந்திரனுக்கு
மேகமும், அவன்பூண்ட நகைகளுக்கு இந்திர வில்லும் உவமை. இந்திரன்
நிறம் கருமை. பல நிற ஒளி மணிகள் பதித்தநகைகள் வானவில்லின்
பலநிறங்கள் கொண்டதற்கு ஏற்புடைத்து.                            11

2598.மானா உலகம் தனில்,
     மன்றல் பொரும்,
தேன் நாறு, நலம்
     செறி, தொங்கலினான்;
மீனோடு கடுத்து உயர்
     வென்றி அவாம்
வான் நாடியர் கண் எனும்
     வாள் உடையான்;