பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 481

3258.'எடுத்த மலையே நினையின், "ஈசன்,
     இகல் வில்லாய்
வடித்த மலை, நீ இது, வலித்தி"
     என, வாரிப்
பிடித்த மலை, நாண் இடை பிணித்து
     ஒருவன் மேல்நாள்
ஒடித்த மலை, அண்ட முகடு உற்ற
     மலை அன்றோ?

    எடுத்த மலையே நினையின் - கயிலையங்கிரியை எடுத்ததையே
பெரிதாக நீ கருதினால்; ஈசன் இகல் வில்லாய் வடித்த மலை - இது
சிவபெருமான் முன்பு வளைத்து வில்லாய்ப் பிடித்த மேருமலை போன்றது;
நீ இது வலித்தி என - இதனை நீ வளைப்பாயாக (என்று சனகன் கூற);
வாரிப் பிடித்த மலை - அள்ளியெடுத்துப் பிடித்த மலைக்கு நிகரானதும்;
ஒருவன் - ஒப்பற்ற இராமன் (அன்று); நாணிடைப் பிணித்து - நாண்
கயிற்றைப் பற்றி; மேல் நாள் - முன்னொருநாள்; ஒடித்த மலை - ஒடித்த
மலைக்கு நிகரானதுமான வில்; அண்ட முகடு - உச்சி வானத்தை; உற்ற
மலை அன்றோ -
தழுவிய மேரு மலை போன்றதே அன்றோ?

     நீ எடுத்தது கயிலை மலை. ஆனால் இராமன் ஒடித்த வில் அதனினும்
மேலான மேருமலை போன்றது. இதனால் வலிமையினை ஒப்பிட்டுப் பார்க்க
வேண்டுகிறான். சொற்பொருட் பின்வருநிலை அணி.                  22

3259.'யாதும் அறியாய்; உரை கொளாய்;
     இகல் இராமன் 
கோதை புனையாமுன், உயிர்
     கொள்ளைபடும் அன்றே;
பேதை மதியால், "இஃது ஓர் பெண்
     உருவம்" என்றாய்;
சீதை உருவோ? நிருதர் தீவினை
     அது அன்றோ?

    'யாதும் அறியாய் - இராமன் வலிமை முதலானவற்றை முழுதும்
அறியாதவன் நீ; உரை கொளாய் - எடுத்துச் சொன்னாலும் உணர
மறுக்கிறாய்; இகல் இராமன் கோதை புனையா முன் - உன் பகையாய் நீ
கருதும் இராமன் போர் புரியத் தும்பை மாலை சூடு முன்; உயிர்
கொள்ளை படும் அன்றே -
அவன் பகைவர் உயிர் சூறையாடப்படும்
அன்றோ?; பேதை மதியால் - அறியாமை கொண்ட மதியால்; இஃது ஓர்
பெண் உருவம் என்றாய் -
(சீதையை) ஒரு மனிதப் பெண்ணாக
மதித்திருக்கின்றாய்; அது சீதை உருவோ? - உண்மையில் அது சீதையின்
வடிவமோ? (அன்று);